பெல்ஜியம், ஏப்.23- ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் அடைக்கலம் கொடுக்க பெல்ஜியம் முன்வந்திருக்கி றது. ஈக்குவடாரில் 2007ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் ஜனாதி பதியாக இருந்த ரபேல் கோரியா மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி, அரசியலில் ஈடுபட முடியாத நிலையையும் வலதுசாரி ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தற்போது பெல்ஜியத்தில் இருக்கும் கோரியாவுக்கு அந்நாட்டு அரசு பாதுகாப்பு தர ஒப்புக் கொண்டுள்ளது.