சென்னை, ஜூன் 3- கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி, கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடி யிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக் கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஜூன் 3) வழங்கினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் வெள்ளியன்று (ஜூன்3) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கள் நடைபெற்றது. திமுக தலைவரும் முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவினார். இதேபோல், கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம், கருணாநிதி யின் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி யிலுள்ள கனிமொழி இல்லம், மெரினா கடற்கரையிலுள்ள கருணா நிதி நினைவிடத்திலும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மைச் செயலா ளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோ வன், ஆ.ராசா எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதும் ரூ.10 லட்சத்திற் கான காசோலையும் வசனகர்த்தா ஆரூர் தாஸூக்கு அவரது இல்லத் திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர் கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த ஆயிரம் திரைப்படங்களின் உரை யாடலில் அழுத்தமான பங்கு வகித்த வர். அதேபோல், கலைஞர் எழுது கோல் விருதும் 5 லட்சம் ரூபாயும் பாராட்டு சான்றும் மூத்த பத்திரி கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதலமைச்சர் வழங்கினார். உதவி ஆசிரியராக தினத்தந்தி யில் பணியை தொடங்கிய ஐ.சண்முக நாதன், 70 ஆண்டுகாலம் ஒரே பத்திரி கையில் தொடர்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.
கனவு இல்லம்
பின்னர், கனவு இல்லத் திட்டத்தின் கீழ், ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தர மூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்க வாசகம், முனைவர் கு.மோக னராசு, இமையம் என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடி யிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக் கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.