- நாடு முழுவதும் சுமார் 690 பல்கலைக் கழகங் கள், 34,000 கல்லூரிகள் தேசிய தர மதிப்பீடு கவுன்சிலின் அங்கீகாரம் இன்றி இயங்கி வரு கின்றன என ஒன்றிய கல்வி அமைச்சகம் தக வல் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணை க்கும் நடவடிக்கைக்கு எதிரான மனுவை விசா ரணைக்கு ஏற்க உச்சநீதி மன்றம் மறுப்பு. உயர்நீதி மன்றத்தை நாட மனு தாரருக்கு அறிவுறுத்தல்.
- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபா கரன் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி இறுதி கட்டப்போரில் இறந்து விட்டதாகவும், உயிரி ழந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவிஹெரத் தகவல் தெரி வித்துள்ளார்.
- மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜெய்நகரில் நடைபெற்ற கண்காட்சியில் பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரி ழந்தனர். 10 பேர் காய மடைந்தனர்.
- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்படும் கூகுள் நிறுவன அலு வலகத்திற்கு தொலை பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட் டது. போலீசார் விசார ணையில் ஹைதரா பாத்தில் உள்ள குடி போதை ஆசாமியின் உள றல்தான் வெடிகுண்டு மிரட்டல் என தகவல் வெளியாகியுள்ளது.
- துருக்கி நாட்டில் நில நடுக்கத்தில் இருந்து உயிர்தப்பி கடும் குளிரில் தவிப்பவர்களுக்கு சொகுசு கேரவன்களை வழங்கியது கத்தார்நாடு.
- திருச்சி லால்குடியில் சாதிய பாகுபாடின்றி ஜல் லிக்கட்டு நடத்தக் கோரிய வழக்கில் திருச்சி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- கொலிஜியம் பரிந்துரைத் துள்ள நீதிபதிகளை முழு மையாக நியமிக்காதது கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- துருக்கியில் நிலநடுக்கத் தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பாக 113 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. கட்டிட ஒப் பந்ததாரர்கள் உட்பட 12 பேர் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- தொழில்நுட்ப துறையில் நடந்து வரும் பணி நீக்கங்கள் விமானத் துறை யிலும் தாக்கத்தை ஏற் படுத்தும் என விர்ஜின் அட்லாண்டிக் தலைமை நிர்வாக அதிகாரி ஷாய் வெயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உக்ரைன் பகுதியில் உள்ள டான் பாஸுடன், ரோஸ்டோவை (ரஷ்யா) இணைக்கும் வகையில் 200 கிமீ நீளமுள்ள நீர் குழாய் அமைப்பை ரஷ்யா உருவாக்கி வருவதாக ரஷ்ய அரசுக்கு சொந்த மான செய்தி நிறுவன மான டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.