states

இலங்கை இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் எங்கே?

வவுனியா ,பிப்.25- 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  இலங்கை இறுதிக் கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் தமிழர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்க லாம் என்ற வகையில் வவுனியா மேல்  நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்த சாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் உருத்திமூர்த்தி (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களை அவர்க ளது மனைவிகள்  2013ஆம் ஆண்டு  தாக்கல் செய்திருந்தனர்.

 இந்நிலையில், அதற்கான தீர்ப்பு பிப்.23 அன்று  வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் எஸ்.இரட்ணவேல் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களை எதிர்வரும் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தவும் அல்லது அவ்வாறு இயலாது போனால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் இலங்கை ராணு வத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறித்த மனுக்கள் மீதான கட்டளை இலங்கை ராணுவத்திற்கு எதிராக உள்ளதாகவும் தமது உறவினர்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இதுவொரு பெரிய வெற்றி எனவும்  இரட்ணவேல் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு தொடர்பாக சசிதரன் மனைவி ஆனந்தி, கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தி ருந்தோம். இந்த தீர்ப்பு நம்பிக்கை தந்திருக்கிறது. ராணுவம் என்ன பதில் சொல்லப்போகிறது என்று பார்க்க வேண்டும். அறம் வெல்ல வேண்டும் என்ற எங்க ளின் போராட்டம் வென்றிருக்கிறது என்று கூறியுள்ளார்.   இலங்கையின் உள்நாட்டு போரின் பின்னர், முன் னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பெரும்பாலா னோரை, ராணுவத்திடம் ஒப்படைத்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறி வருகின்ற னர்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு உறவினர் கள், பல வருட காலமாக பல்வேறு விதமான போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.