சென்னை, ஜூலை 28 - செஸ் போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கான விளம்பர பலகை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில் வைக்கப்பட்டி ருந்தது. அதில் பாஜகவினர் சிலர் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பி னர் கறுப்புமை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாமல் இருந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டது. அதில், முதல்வர் மு.க.ஸ்டா லின் படம் மட்டும் இடம்பெற்றிருந்தது. அதில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வர்களை காவல்துறை கைது செய்ய வில்லை? பாஜகவினர் என்பதால் காவல் துறை கைது செய்ய அஞ்சுகிறதா? பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே மோடி படத்தின் மீது கறுப்பு மை பூசியுள்ள னர். இவ்வாறு கைது செய்வதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்சமான நட வடிக்கையை தமிழக காவல் துறையினர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.