states

வளர்ச்சி, நலத்திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்

சென்னை, மே 23- மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான அர.சக்கர பாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.எஸ்.ரகுபதி, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். சேலம் - கே.என் நேரு, தேனி - ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு, தருமபுரி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தென்காசி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராம ச்சந்திரன். ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி - ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கோவை - செந்தில்பாலாஜி; பெரம்பலூர்- எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தஞ்சாவூருக்கு அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு ள்ளனர். இதனை அரசு குறிப்பு தெரிவித்துள்ளது.