பள்ளிபாளையம், பிப்.9- பள்ளிபாளையம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த டி.வி.எஸ்.மேடு பகுதியைச் சேர்ந்த நசரத் கான் (58) - சாஜிதா (50) தம்பதியினரின் ஒரே மகன் ரியாஸ் கான் (19). தந்தை கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பள்ளிபாளையத்தில் ரியாஸ் கானும், அவருடைய அம்மா வும் மட்டுமே வசித்து வந்த னர். ஈரோட்டில் உள்ள செல் போன் கடை ஒன்றில் ஊழிய ராக ரியாஸ்கான் பணி புரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததாகக் கூறப் படுகிறது. மேலும், வேலை நேரத்திலும், வீட்டிற்கு வந்தா லும் அதிகளவு நேரத்தை ஆன்லைன் ரம்மி மற்றும் பிற விளையாட்டுகளில் செல விட்டு வந்ததாக தெரிகிறது.
இதனை தாய் சாஜிதா கண் டித்துள்ளார். இதனால் ரியாஸ் கான் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், ஈரோடுக்கு வேலைக்குச் செல்வது போல் சென்று விட்டு மீண்டும் பள்ளிபாளையத்திற்கு ரியாஸ் கான் வந்துள்ளார். பள்ளிபாளையம் பழைய பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நண்பர் களுக்கு வாட்ஸ் ஆப் செய லியில், “தனது தாயை பத்தி ரமாக பார்த்துக்கொள்ளுங் கள்” என்ற ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இத னைக்கண்ட அக்கம், பக்கத் தினர் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கும், வெப் படை தீயணைப்பு நிலை யத்திற்கும் தகவல் அளித்த னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ரியாஸ் கானை சடலமாக மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில், ரியாஸ் கான் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு களை விளையாடி வந்துள் ளார். சிறிது பணமும் இழந் துள்ளதாக தெரிகிறது. மேலும், சரிவர வேலைக்கு செல்லா மல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த ரியாஸ் கான் தற்கொலை செய்து கொண் டது தெரியவந்தது. ஆன் லைன் ரம்மியால் தமிழ்நாட் டில் ஏராளமானோர் உயிரி ழந்த நிலையில், தற்போது பள்ளிபாளையத்தில் வாலி பர் ஒருவர் உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.