சமீபத்தில் வாட்சப்பில் ஒரு காணொ ளியை ஒருவர் வெளியிட்டு இருந் தார். நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய முகப்பில் நின்று கொண்டு அதில் பேசுகிறார். நெல்லை சந்திப்பு பேரூந்து நிலையத்திற்கு வைக்கப் பட்டிருக்கும், பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயர்ப் பலகையை காட்டுகிறார். ஈரோட்டில் பிறந்த ராமசாமி பெயரை ஏன் திருநெல்வேலி பேருந்துநிலை யத்திற்கு வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதாக இருந்தால், நெல்லை யப்பர் காந்திமதி அம்பாள் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்றும் அந்தக் காணொளியில் பேசி இருந்தார். அவரது பேச்சில் பெரியார் மற்றும் சீர்திருத்த இயக்க எதிர்ப்பும், மத அடையாளத்தை இழுத்து, வகுப்புவாத அரசியலை முன் வைக்கும் உத்தியையும் அறிந்து கொள்ள முடியும். அவருக்கு பெரியாரையும், அவ ருக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள தொடர்பை பற்றியும் தெரியவில்லை. சுய மரியாதை இயக்கத்தின் துவக்கம், சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில் இருந்து தான் உருவானது. பிராமணர் அல்லாதோர் இயக்கம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று அது பின்னர் வளர்ந்தது என்பது வரலாறு. வரலாறு அறியாத சமூகத்தின் பொதுப்புத்தியில் இது போன்ற செய்தி களை இடைவிடாமல், தொடர்ந்து பரப்பு வது தான் வகுப்புவாதத்தின் நுட்பமான அரசியலாகும். இந்த அரசியலுக்கு எதிர்வினையும் தொய்வின்றி முன் எடுக்க வேண்டும். அத்தகு முயற்சியில் ஒன்றாக அ.ஆறுமுகம் எழுதிய ‘மனிதன் மாறி விட்டான்’ என்ற நூல் வெளிவந்துள்ளது பாராட்டுக்குரியது.
அணிந்துரையில் பேராசிரியர் வ.பொன்னுராஜ், இந்திய சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில், தீவிர வலதுசாரி சிந்தனையின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் குறித்து ஒரு பருந்துப் பார்வையை இந் நூல் முன் வைக்கிறது என்றும், ஆர்.எஸ். எஸ் கும்பல் அவிழ்த்து விடும் மலிவான பொய்களை உடைத்தெறிகிற இத்தகைய நூல் அவசியமாகிறது என்றும் குறிப்பிடு கிறார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் வகுப்புவாத அரசியல் குறித்து முக்கிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நூலின் சிறப்பு பற்பல வரலாற்றுச் செய்திகளை, மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும், அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்ற டைய வேண்டும் என்கிற நோக்கில் இருப்பது தான். நூற்றிபத்து பக்கங்களில், இருபது அத்தியாயங்களில் செய்திகள் கோர்வையாக, எளிமையாக எழுதப்பட்டு உள்ளது. காந்தி கொலையில் இருந்து கட்டுரைகள் துவங்குகிறது. காந்தி கொலையை பயன்படுத்தி நாடு முழு வதும் மத கலவரத்தை தூண்டும் முயற்சி யும், அதனை நேரு முறியடித்த சூழலை யும், மொராஜி தேசாய், கோவிந்த் வல்லப பந்த் போன்றோருக்கு முன் கூட்டியே அனைத்தும் தெரிந்திருந்தும், கொலையை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தின் பின்னணியையும் நூல் எடுத்துரைக் கிறது.
1966ல் பசுவதை தடைச் சட்டம் கோரி பாரதீய ஜனசங் கட்சியின் தூண்டுதலின் பேரில் சாதுக்கள் நடத்திய பேரணியும், அதில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதையும், கோடிக்கணக்கில் சொத்துக்கள் அழிக்கப் பட்டதும், பேரணி காங்கிரஸ் தலைவர் காமராஜரை கொல்லும் நோக்கில், அவரது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதையும் விவரிக்கிறது. அது குறித்து காமராஜர் பேசும் போது, என்ன இப்போ, பசு வுக்காக வருத்தப்படுறாங்கன்னேன். மனு சனுக்கு குந்த குடிசையில்ல, கட்ட துணி யில்ல, அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்குறான், ஆனா இவங்க பசுமாட்டை வச்சு பாலிடிக்ஸ் பண்ணப் பாக்கிறாங்க. அட, மாட்டுக்கு கொடுக்குற மரியாதைய மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன் என்றார் என்பது பதிவாகியிருக்கிறது. மேலும் அவர் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது, அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித் தான். இந்த காம ராஜ் தான் சோசலிச சமுதாயம் அமைத்தே தீருவேன் என்று சொல்கிறான். என் வீட்டுக்கு தீ வைக்கிறான். இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன் என்று பேசி இருக்கிறார். வெறுப்பு மற்றும் வன்முறை அரசியல் அவர்களது அணுக்களில் கலந்து இருப்பதை அறிய முடிகிறது. ஆரிய சமாஜம் மற்றும் ஆனந்த மடம் நாவல், அதில் வரும் வந்தே மாதரம் பாடல் குறித்தும், அதன் இஸ்லாமிய வெறுப்பு குறித்தும், இவை 1800களில் துவக்க காலத்தில் நடந்தன என்பது பற்றியும் நூல் மிகச்சரியாகவே ஆர்.எஸ்.எஸ் வர லாற்றைப் பேசத் துவங்குகிறது.
இந்து மகா சபைக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குமான தொடர்பு, அதன் தொடக்க கால தலைவர்கள், 1951ல் ஜன சங்கம் கட்சி துவக்கப்பட்டது, அவசர நிலை பிரகடனம், ஜனதா அரசாங்கம், பின் அது கவிழ்ந்தது, 1980ல் பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்ட வரலாற்றையும் வரிசைக் கிராமமாக அடுக்குகிறது நூல். வர லாற்றை திரித்துக் கூறுவது பற்றி மட்டும் எழுதாமல் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி ஆய்வாளர்களின் கூற்றை யும் முன்வைத்து இருப்பது நூலின் சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயங்களுக்கு முன்பும் இடம்பெற்றுள்ள புகைப் படங்கள், நூலுக்கு நெருக்கமாக வாசக னை அழைத்துச் செல்கிறது. ஸ்நேகா அச்சகம் அழகுற நூலை தயாரித்துள்ளது. அன்பாலயம் வெளியிட்டுள்ளது. வகிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தோழர் அ.ஆறுமுகம், இயக்கப் பணி களுக்கு இடையில் நூல் எழுதும் பணி யினையும் செய்து வருவது மகிழ்ச்சி. இது அவரது இரண்டாவது நூல். பரவ லாக வெகுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டிய நூல்.
நூல் : ‘மனிதன் மாறிவிட்டான்’
ஆசிரியர் : அ.ஆறுமுகம்,
“அன்பாலயம் வெளியீடு”
பக்கம்: 110 விலை: :ரூ.120
தொடர்புக்கு- 9443520097