சென்னை,ஜூன் 5- சென்னையில் காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் எஸ். எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “காயிதே மில்லத் தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர். அவர் பெடரில் தமிழக அரசு விருது வழங்க வேண் டும். காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கு வதுடன், அவரது பிறந்தநாளை மதநல்லிணக்க நாளாகவும் கடை பிடிக்க வேண்டும்” என்றார். திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வரு கிறார் என்றும் 2024 தேர்தலை மனதில் வைத்து பாஜக இப்படி செயல்படு கிறது. அவர்களின் கனவு பலிக்காது. அதிமுக தற்போது விழித்துக் கொண்டு செயல்பட தொடங்கி விட்டது என்றும் அவர் கூறினார்.