மதுரை, பிப்.16- திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவர் ஒருவரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படை யில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. அவா் பணியாற்றும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அவா் இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்து வரு கிறார். அவரது ஜாமீன் மனுக்கள் விசா ரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், அங்கித் திவா ரியை தாங்களும் விசாரிக்க விரும்பு வதாகக் கூறி, அமலாக்கத்துறை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க லஞ்ச ஒழிப்புத் துறை மறுப்பதால் அங்கித் திவாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக் கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை கடந்த ஜனவரி 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு பட்டிய லிட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, அமலாக்கத் துறையின் மனுவுக்கு பதிலளிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் வழக்கு விசா ரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை வெள்ளியன்று விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.