நாட்டில் எங்கோ, ஏதோ ஓர் மூலையில் மணிக் கொருதரம், ஏன் நிமிடத்திற்கொருதரம் பல சமூக அவலங்கள் நடந்தேறியவண்ணம் இருக்கின்றன. அதில் சில, போராட்டக் காரணிகளால் அவ்வப்போது வெளிப்பட்டு பேசு பொருளாகின்றன. கால ஓட்டத்தில் அவை மறக்கவும் படுகின்றன. அப்படியான சம்பவங்களில் ஒன்றுதான் 2017இல், பீகாரில் நடந்த நாட்டையே உலுக்கிய சிறுமிகள் காப்பக வன்கொடுமை. முசாஃபர்பூர் நகரில் செயல்பட்ட சிறுமிகள் காப்ப கத்தில் நடந்த பாலியல் கொடுமைகளை, சிபிஐ விசா ரித்து,குற்றங்களை நிரூபித்து, தொடர்புடைய காப்பக உரிமையாளர் ப்ரஜேஷ் தாக்குர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியவர்களோடு, நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசையும் உச்சநீதி மன்றம் குட்டியதையும் நாம் மறந்து விட்டோம். இதனை நினைவூட்டும் விதமாக,இந்நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, சமீபத்தில் வெளி வந்துள்ள இந்திப் படம்தான் “பக்ஸக்”(வேட்டை மிருகம்) பன்ஷி சாகு என்பவன் முன்னாபர்பூரில் ஆதரவற்ற சிறுமிகள் காப்பகம் நடத்துகிறான். அரசின் விளம்பரங்க ளைப் பெறுவதற்காக மூன்று போலி செய்தி நிறு வனங்களையும் நடத்துகிறான்.
காப்பக சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறான். ஒத்துழைக்காதவர்களை கொலை யும் செய்கிறான். இவனது அரசியல் செல்வாக்கை கண்டு காவல்துறையே அஞ்சுகிறது. இவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைவரும் அஞ்சுகின்றனர். பாட்னாவில் வாழும் வைசாலி,அர்விந்த் இருவரும் இலட்சிய தம்பதியர் வைசாலி, “விடாமுயற்சி” என்ற செய்தி சேனலை வயதான கேமராமேன் பாஸ்கரின் உதவியுடன் நடத்துகிறார். அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை தனது சேனல் வழியாகப் பயன் கருதாது, பயப்படாது வெளிச்சத்திற்கு கொண்டு வருபவள் வைசாலி.இதனை ஒரு லட்சிய வேட்கையோடு செய்கிறார். அரசு அலுவலகங்களின் முக்கியக் கோப்புகளை திருட்டுத்தனமாக செய்தி நிறுவனங்களுக்கு விற்கும் தர கர் ஒருவன், முன்னாப்பர்பூரில் உள்ள சிறுமிகள் காப்ப கத்தில் நடைபெறுகின்ற பாலியல் வன் கொடுமைகள் பற்றிய சமூகத் தணிக்கை அறிக்கையினை, வைசாலிக்கு விற்கிறான்.
இந்த அறிக்கையின் உதவியோடு வைஷாலி குழு, காப்பகக் கொடுமைகளை தங்களது சேனலில் வெளி யிடுகிறார்கள். அதனால் பல இடர்ப்பாடுகளைச் சந்திக்கி றார்கள். இவர்களது தொடர் செயல்பாட்டால், பன்ஷி சாகு தலைமையிலான கும்பல் கைது செய்யப்படுகிறது. பாதிப்புக்குள்ளான அனாதை பெண் குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள். இதுவே படக்கதை. இப்படம் அரசு இயந்திரத்தின் அலட்சிய செயல் பாட்டைப் பேசுகிறது. குழந்தைகளின் மீதான அத்து மீறல்கள் கொடுங்குற்றம் என்று நினைக்கத் தோன்றாத மனிதர்களின் மரத்துப் போன உளவியலை அம்பலப் படுத்துகிறது. இணைய தள துணைகொண்டு, அநீதிக்கு எதிராக தனிநபர்களும் சாமர்த்தியமாகப் போராட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. * தர்பங்காவில், சகோதரர் நிலப்பிரச்சனை காரண மாக ஒருவர் மீது ஒருவர் சுட்டுக் கொண்டார்கள். * முஸ்கேரில், ஒரு பெண் நாய்க்கும் ஆண் நாய்க்கும் நடந்த திருமணம் கலவரத்தில் முடிந்தது.” போன்ற தொலைக்காட்சி செய்திகளை வைசாலியின் தொலைக்காட்சி பகடி செய்வது ரசிக்கத்தக்கது. பிணம் எரிப்பவர், பிணத்தின் குலம் கோத்திரம் கேட்கும் போது, “அனாதைக்கு ஏது குலம் கோத்திரம்” என்பது முகத்திலறையும் பதில். “அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களிடம் பதவி பறிபோய் விடுமோ! என்ற அச்சம் மரண பயத்தை விட அதிகம்”என்பதும்
வைசாலியிடம் அவளது கணவன், “நம்ம குழந்தை களையா பன்ஷி சாகு வன்கொடுமை செய்தான்?யாரோ பெற்ற குழந்தைகளை தானே!” என்பதற்கு பதிலடியாக வைசாலி தனது கணவனிடம், “பிரச்சனை எங்கு உள்ளது என்றால், உன்னைப் போன்ற ஆட்களிடம் தான்” என்பதும்; “நம்ம சிஸ்டத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கையில் உங்களுக்கு அதிகாரத்தை கொடுப் பார்கள். இன்னொரு கையால் அதனைப் பிடுங்கு வார்கள்” என்பதும் பொருட்செறிவுள்ள வசனங்கள். பட முடிவில் வைசாலி தனது சேனல் மூலம் மக்களின் குரலாக ஒரு கேள்வியை முன்வைப்பார்; “முன்னாபர்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள் அனாதைகள். அனைவரும் சின்ன சின்ன பெண் குழந்தைகள். அவர்களிடம் யார் யாரெல்லாம் தப்பாக நடந்து கொண்டார்கள் என்பதையெல்லாம் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
நாமெல்லாம் ஏதோ கொடுத்து வைத்தவர்கள். சின்ன விஷயமாக இருந்தால் கூட, நேரடியாக அம்மாவிடம் சென்று அது குறித்து விவாதிக்க முடியும். ஆனால் அந்த குழந்தைகளுக்கு யாருமே கிடையாது. அம்மாவைக் கூட பார்க்காத குழந்தைகள். சரி, இதனால் நமக்கு என்ன பிரச்சனை? இவர்களுக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். நீங்க இதைப் பற்றி ரொம்ப யோசிக்கா தீங்க! யோசித்து பொறுப்பை தட்டிக் கழித்திடாதீங்க. அதை அப்படியே தூங்க விடுங்கள். இறுதியாக ஒரு கேள்வி? சக மனிதனின் துக்கத்தை பார்த்து வேதனைப்பட நாம் மறந்துட்டோம். உங்க ளுக்குள் இன்னும் மனிதத் தன்மை இருக்குதுன்னு நினைக்கிறீங்களா?அல்லது நீங்களே ஒரு வேட்டை மிருகமா இருக்கீங்களா?”
என்று வைசாலி எழுப்புகிற இக்கேள்வி பார்வையா ளர்களின் மனதைத் தொட்டு மனசாட்சியைச் சீண்டு கிறது. இதுவே இப்படத்தின் சிறப்பு! பூமிபட்நாகர் வைசாலியாக மிகச் சிறந்த பக்கு வப்பட்ட நடிப்பைத் தந்துள்ளார். இவர் சிறந்த நடிகைக் கான பல ஃபிலிம் ஃபேர் விருது பெற்றவர். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். சஞ்சய் மிஸ்ரா,பாஸ்கர் ஷின்காவாக நடித்துள்ளார்.இவர் “மாஸான்”படத்திற்காக சிறந்த துணை நடிக ருக்கான விருது பெற்றவர். ஆதித்யா,பன்ஷி சாகுவாகவும்,சாய் டம்ஹங்கர் போலீஸ் சூப்பிரண்டு ஆகவும் இயல்பான நடிப்பை தந்துள்ளனர். அரசியல் சமூக அக்கறையுள்ள இப்படத்தை புல்கிட் இயக்கியுள்ளார். மிக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறந்த படத்தை அளிக்க முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நல்ல படத்தொகுப்பு. சராசரியான இசை மற்றும் ஒளிப்பதிவு. இப்படம் நெட்பிளிக்ஸ், தமிழில் உள்ளது.