நீட் தேர்வு மசோதா குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த பாஜக வினர், மாணவியின் தந்தையை வேலை நீக்கம் செய்யுமாறு சேலம் இரும்பாலை நிர்வா கத்திடம் மனு அளித்துள்ள சம்பவத்திற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆளுநர் மாளிகையில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெற்றோர் என்ற அடிப்ப டையில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டது. நீட் தேர்வு குறித்து சேலம் உருக்காலையில் பணி புரியும் தொழிலாளி கூ.ரா.அம்மாசியப்பன், தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் தமிழக ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர் பாக ஆளுநரிடம் அம்மாசியப்பன் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஒருபோதும் நீட் விலக்கிற்கு கையெழுத்திட மாட்டேன்” என தெரிவித்திருந்தார். ஆளுநர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பனை பணி நீக்கம் செய்யுமாறு சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் உருக்காலை அதிகாரிகளி டம் புகார் மனு அளித்துள்ளனர்.
சிஐடியு கண்டனம்
இதற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு சேலம் உருக்காலை சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஊடகங்கள் கேட்ட கேள்விகள் அடிப்ப டையில், பெற்றோர் என்ற வகையில் தனது கருத்தினை அவர் பதிவு செய்தார். கல்விக்கான உரிமை, சமூக உரிமை ஆகியவை அரசியல மைப்பு சட்டத்தின் பிடியில் தான் இன்றளவும் இருக்கின்றது என்ற சாமானிய மக்களின் எண் ணத்தை பொய்ப்பிக்கும் வகையில், சேலம் மாவட்ட பாஜக தலைவர் பி.சண்முகநாதன், அம்மாசியப்பன் மீது துறைரீதியான நடவ டிக்கை எடுக்கும்படி கடிதம் வழங்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாசிச பாஜக என்று முழக்கமிட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா மீதான அவதூறு வழக்கே செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இப்படி ஒரு அவதூறு முயற்சி, அரசியல் அநாகரீகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கின்றது. இவ்வாறான அடிப்படையற்ற புகார்களை சேலம் உருக்காலை நிர்வாகம் புறக்கணிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற நபர்களை சேலம் உருக்காலை வளாகத்தில் புகார் அளிப் பது என்ற பெயரில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.