வீட்டுக் காவலில் ஆந்திர முதல்வரின் தாயார்!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தில் தனிக் கட்சி நடத்தி வருகிறார். இவர் தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு காரில் புறப்பட்டு சென்றார். போலீசார் கைது செய்ய முயன்றபோது, சர்மிளா காரை விட்டு இறங்கவில்லை. இதனால் கிரேன் மூலமாக காருடன் அவரைத் தூக்கிச் சென்ற தெலுங்கானா போலீசார், எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் அடைத்த னர். ஐபிசி 353, 333, 327 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, காவல்நிலையத்தில் தனது மகளை பார்ப்பதற்காக சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மா புறப்பட்ட நிலையில், தெலுங்கானா போலீசார் அவரை வீட்டுக் காவலில் சிறை வைத்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக வேட்பாளரை தேடல்
சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் பானுபிரதாப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பா ளராக நிறுத்தப்பட்டு இருப்பவர் பிரம்மானந்த் நேதம் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் விபசாரத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இருந்தும் பாஜக அவரை வேட்பாளராக அறிவித்தது. இதனிடையே, நரேஷ் சோனி, பிரம்மானந்த் நேதம் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பாஜக வேட்பாளர் பிரம்மானந்த் நேதம் தலைமறைவாகி இருக்கிறார்.
பெண்களுக்காகவே ராம்தேவ் பாடுபடுகிறாராம்!
“சேலை, சல்வார் கமீஸ் அணியும்போது மட்டுமல்ல; ஆடையே அணியாத போதும் பெண் கள் அழகாக இருப்பார்கள்” என்று பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ், “எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத்தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மகளிர் ஆணையத்திற்கு பதிலளித்துள்ளார். “பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மேம்படுத்துவதற்காக உழைத்து வருகிறேன்” என்றும் கடிதத்தில் அவர் கூறிக்கொண்டுள்ளார்.
சீனா அருகே இந்திய - அமெ. கூட்டு ராணுவப் பயிற்சி!
உத்தரகண்டின் ஆலி நகரில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பகுதியானது சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதாகும். ரஷ்ய தயாரிப்பான மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த போர் பயிற்சியில் மிக அதிக உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்தபடி பறந்து சென்று படைகள் பயிற்சிகளை மேற்கொள்ளும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. யுத்த அபியாஸ் என்ற பெயரில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடக்கிறது.
‘சுதந்திரத்திற்கு எந்த பாஜக தலைவர் போராடியிருக்கிறார்?’
தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில ளித்துள்ளார். அதில், “நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக எங்கள் 2 தலைவர்களை தீவிர வாதத்துக்கு தியாகம் செய்துள்ளோம். நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பிய இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரையும் இழந்தோம். ஆனால், நாட்டின் சுதந்தி ரத்துக்காக போராடிய ஒரு தலைவராவது பாஜகவில் இருக்கிறாரா?” என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.டி.ரவி எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிய வேண்டும்!
“சித்தராமையா முதல்வரானால் இந்துக்கள் தாக்கப்படுவார்கள்” என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், எம்எம்ஏ-வுமான சி.டி. ரவி பேசியுள்ளார். அவர், எந்த ஆதாரத்தின் அடிப்ப டையில் இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை. அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கருத்துகளை பாஜக-வினர் கூறுகிறார்கள். இந்த அரசின் ஊழல்கள், வாக்காளர் பட்டியல் முறைகேடு போன்ற விவகாரங்களை மூடிமறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பேசுகிறார்கள். கிராமப்புறங்களில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். எனவே, சி.டி.ரவிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு
சென்னை, நவ. 29- அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர வுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர் வைர முத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனி சாமி தரப்பில், வழக்கு விசாரணை தள்ளிப்போவதால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக வும், வழக்கை அவசர வழக்காக கருதி புதன்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், டிசம்பர் 6ஆம் தேதி தம்மால் ஆஜராக முடியாது என்றும், விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வழக்கை புதன்கிழமை விசாரிக்க முடியாது என்றும், நீங்கள் கூறுவது போல் எங்க ளால் செயல்பட முடியாது எனவும் கூறி னர். மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி இறந்த குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி
சென்னை, நவ. 29- நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல் பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட் சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரியவகை ‘மோயா மோயா’ நோய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!
சென்னை, நவ. 29- ஆசியாவில் முதன் முறையாக அரியவகை நோயான மோயா மோயா நோய் பாதிப்புள்ள இரட்டை குழந்தைகளுக்கு சென்னை அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை தரமணியில் அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் உள்ளது. இங்கு நெதர் லாந்தை சேர்ந்த 8 வயதான இரட்டை குழந்தைகளுக்கு வலது கை, மற்றும் காலில் வெட்டி இழுக்கும் நகர்வுகள் இருந்தது. இதனை பரி சோதித்த போது, அரிய வகை நோயான மோயா மோயா என்ற நோயால் அந்த குழந்தை பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு மருந்து, மாத்திரை இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற அடிப்ப டையில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரு குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சையை அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் மேற்கொண்டது. மருத்துவர் ரூபேஷ் குமார் தலைமையிலான மருத்து வக்குழு 6 மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. தற்போது இரட்டை குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சைக்கு முன் கூட்டியே வெற்றி கரமாக செய்ததாக தரவுகள் இல்லாத நிலையில் ஆசியாவில் முதன்முறையாக அப்பல்லோவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.