அரசு நிகழ்ச்சியில் பங் கேற்பதற்காக கிருஷ் ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தர்மபுரியை அடுத்த காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவ ருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்ததாக வும், அதற்கான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப் பில் தெரிவிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, உயர் மருத்துவப் பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை முடிந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிறன்று வீடு திரும்பினார்.