சென்னை, நவ.7- தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கணிச மாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந் துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்த தற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அர சுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய கார ணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்க டியை எதிர்கொண்டனர். அத னால் பல பேர் தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளிலி ருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினார்கள். இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத் துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெறுவதற் காக தங்கள் குழந்தைகளை அர சுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசி ரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளி களில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 விழுக்காடு கணினிகளை கொண்டிருந்தா லும் 79 விழுக்காடு பள்ளிகளில் தான் அவை இயங்கும் நிலை யில் உள்ளது தெரிய வந்துள் ளது.