states

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கத் தயாராகும் காங்கிரஸ்

பெங்களூரு, ஏப்.26- கர்நாடக சட்டமன்றத் தேர்தல்  மே 10 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இத னால் அரசியல் கட்சிகளின்  பிரச்சாரம் தீவிர மடைந்துள்ளது.  இந்நிலையில் முக்கிய தலைவர்கள் மற்  றும் பிரமுகர்கள் கர்நாடகா பாஜகவிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனால் பாஜக வின் மாநில மற்றும் தேசிய தலைமை கலக்க மடைந்துள்ளது.இதனால் பதற்றமடைந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் ஒன்  றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா   பிரி வினையை தூண்டும் பேச்சுகளை பேசி வரு வதாக புகார் எழுந்துள்ளது. செவ்வாயன்று   கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அமித் ஷா, “முஸ்  லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மாநில  அரசால் ரத்து செய்யப்பட்டது ஒரு நல்ல  முடிவே. நான் எப்போதுமே மதம் சார்ந்த இட ஒதுக்கீடுகளை ஊக்குவித்ததில்லை. ஒக்க லிகர்கள், லிங்காயத்துகள்,

தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட வகுப்பி னர் என யாருடைய இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் சிந்திக்க வேண்  டும்” என்றும் “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  கர்நாடகா கலவரங்களால் பாதிக்கப்படும்” என்றும் பேசினார்.  காங்கிரஸ் கண்டனம் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கி ரஸ் கட்சி கண்டனம்  தெரிவித்ததுடன், இந்த  விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்தி டம் (இசிஐ) புகாராக கொண்டு செல்வோம் என்று எச்சரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலை வர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “காங்கி ரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் கலவரங்க ளால் பாதிக்கப்படும் என ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது, கன்னட  மக்களுக்கு வெறுக்கத்தக்க அளவில் விடுக் கப்பட்ட மிரட்டல் ஆகும். தோல்வி பயத்தில்  அமித் ஷா இவ்வாறு மிரட்டல் விடுக்கிறார். அமித் ஷா மிரட்டல் விடுத்திருப்பது 6.5 கோடி கன்னடர்களுக்கு அவமானம்  ஏற்படுத்தும் செயல் என்பதால் அவமானப்படுத்துதல், கல வரத்தைத் தூண்டுதல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்” என்று தெரிவித்தார்.