சென்னை, ஆக.5- தேசிய மொழிகளை உள்ளூர் மொழி கள் என்று கூறி அவமதித்து, இந்தி மொழி யை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் கொக்க ரிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை உள்ளூர் மொழிகள் என்று கூறியுள்ளது டன், காலப்போக்கில் அனைவரும் இந்தி யை ஏற்க வேண்டும் என ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் விஷம் கக்கியுள்ளார். பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழி யை திணிக்கும் பாஜக ஆட்சியின் இந்தப் போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு வின் 38 ஆவது கூட்டத்திற்கு தலைமை யேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணை யில் பட்டியலிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளை, ‘உள்ளூர் மொழிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், காலப்போக்கில் இந்தியை அனைவரும் ஏற்றாகும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தி பேசாத மக்கள் மீது திணிக்கும் முயற்சி
இந்திய அரசியலமைப்பு சட்டம் எட்டா வது அட்டவணையில் தேசிய மொழி களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் செம் மொழித் தமிழ் உள்ளிட்டு 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்துவதுடன், தாய் மொழியிலேயே அனைத்து சேவைகளையும் மக்கள் பெறக் கூடிய விதத்தில் அரசு நிர்வா கம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் அலுவல் மொழி குறித்து நடைபெற்ற விவாதங்களில் ஒற்றை மொழியை அனைத்து மாநி லங்களின் மீதும் திணிக்கக் கூடாது என்ற உறுதியான எதிர்ப்புக்குரல் தொடர்ந்து எழுந்தது. அதன் காரணமாகவே இந்தி மற்றும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்று உறுதிமொழி அளிக் கப்பட்டது. இப்போது பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து தேசிய மொழி களுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மொழியியல் ஆராய்ச்சிகளை யும், தொழில்நுட்ப சாத்தியங்களையும் வேகப்படுத்த வேண்டும். ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் ஆட்சியோ ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற திசை யில் பயணிக்கிறது. இந்தி மொழியை தனது அரசியல் ஆயுதமாக்கி குறுகிய லாபமடையும் நோக்கில் செயல்படு கிறது. அதன் ஒருபகுதியாகவே இந்தி மொழியை பேசாத மக்கள் மீதும் அதனை கட்டாயமாக திணிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
இந்தி பேசாதவர்கள் 60 சதவீதம் பேர்
பாஜக/ஆர்.எஸ்.எஸ் முன்னெ டுக்கும் தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதமே அனைத்து மொழிகளின் தாய் என்று அறிவியலுக்கே விரோதமான கருத்தை முன்வைப்பதுடன், அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது ஒரு மொழி கற்பது கட்டாயம் என்றும் திணிக்கிறது. இப்போது அலுவல் மொழிக்கான அந்தஸ்து இந்தி மொழிக்கு மட்டுமே என தன்னிச்சையாக முன்வைக்கிறது. நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்ற நிலையில் இந்த நடவடிக்கைகள் மக்களை கொதிப்ப டையச் செய்து போராடத் தூண்டுவ தாகவே அமைந்துள்ளன என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதே திசையில் ஒன்றிய அரசு பய ணிக்குமானால், எப்பாடுபட்டாவது போரா டித் தடுப்போம் - அனுமதிக்க மாட்டோம். பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக இந்தியாவை சிதைக்கும் இந்த முயற்சி களுக்கு இடம் தர மாட்டோம். பன்முக இந்தியாவையும், மொழி சமத்துவத்தை யும் பாதுகாப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தெரி வித்துக் கொள்கிறது.
மொழிப் புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்
அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை, ஆக.5- “இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்” என்று ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா கூறியி ருந்த நிலையில், “நீங்கள் கூறுவதை ஏற்று நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல; என்றும், 1965 மொழிப் புரட்சிக் காலத்தை மீண் டும் உருவாக்கி விடாதீர்கள்” என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியை அனைவரும் ஏற்றாக வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. அமித்ஷாவின் இந்தித் திணிப்பு பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
தலையாட்டி பொம்மை மாநிலமல்ல தமிழ்நாடு
இந்நிலையில், அமித்ஷா-வின் இந்தி குறித்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், “எதிர்ப் பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்த டிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சி யாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ் நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டுக்கு வந் தால் ‘தொன்மையான மொழி’ என்று நாக்கில் தேன் தடவுவதும், தில்லிக் குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்க ளும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கி றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள் ளார்.
ஆக்ரோஷமோ.. அமைதியோ எப்படி வந்தாலும் ஏற்க முடியாது
“ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப் பதை பாஜகவும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்ட னத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய மொழிகள், இந்தியிடம் மண்டியிடாது..
அமித்ஷாவின் பேச்சுக்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் சு. வெங்கடேசன், உடனடியாக டுவிட்டரில் கண்டனம் தெரி வித்தார். அதில், “இந்தியை ஏற்றுக் கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தா லும், இறுதியாக அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தி யிடம் மண்டியிடாது. இந்தித் திணிப்பை எங்களின் தமிழ் நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பன்மைத்துவத்தை மக்கள் புரிய வைப்பார்கள்
“பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசி யிருப்பது இந்தித் திணிப்பு. இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சி களைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒரு மைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன் மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரை வில் புரியவைப்பார்கள்” என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, கண்டனம் பதிலடி கொடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களிலும் இந்தி வீழ்த்தப்படும்..
“தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள், இந்திக்காக ஏங்க வில்லை; அவை எப்போதும் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும் இந்தியை எதிர்ப்பின்றி ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்றுதான் பொருள். கடந்த காலங்க ளில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப் போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூம் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.