டெல் அவிவ், அக்.17 - பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிர மடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் புதனன்று இஸ்ரேல் ஜனாதி பதியை சந்திக்க உள்ளார். இந்த பயணத்திற்குப் பிறகு ஜோர்டான் மன்னரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு மற்றும் இஸ்ரேலின் உயர்மட்ட அதி காரிகளுடன் 7 மணி நேரத்திற் கும் மேலாக நீடித்த சந்திப்பி ற்குப் பிறகு அமெரிக்க வெளி யுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இந்த பய ணம் குறித்தான செய்தியை அறிவித்தார். இஸ்ரேல் ஜனாதிபதி யுடனான சந்திப்பிற்குப் பிறகு எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி மற்றும் பாலஸ்தீனிய அதிகார சபை யின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்,ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோரை சந் தித்து மனிதாபிமான உதவி களை காசாவுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பற்றி பைடன் பேச இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினர் மீது தரைவழித் தாக்குதலை நடத்த தயாரா கிவிட்டோம் என தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், மூன்று நாட்களான நிலையில் எல்லை யில் இருந்து, காசா மற்றும் லெபனான் மீது தொடர் ஏவு கணை தாக்குதலை நடத்தி வரு கிறது. அப்பாவி மக்கள், குழந்தைகள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசாவில் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து இல்லாத நிலை ஏற்பட்டு நிலைமை கொந்தளிப்பாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேல் பயணம் முக்கியமானதாக உள்ளது.