states

அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம்: வழக்கு தள்ளுபடி

சென்னை, ஜூலை 25- சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தர விடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப் பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி பாளையங்கோட் டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில் அரசு அலுவலகங்களில் அவரது படத்தை வைக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்,  காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளூ வர், பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோ ரின் புகைப்படங்கள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

ஆனால் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும்  உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்க ளில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தர விட வேண்டும் என மனுவில் கோரியிருந் தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதிகள், “அம்பேத்கர் படம் வைப்பது  தொடர்பாக ஏற்கெனவே உத்தரவு உள்ளது. எனவே மீண்டும் அதே  கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள தால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக” எச்சரித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப்  பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.