states

அமலோற்பவம் பள்ளி 28 ஆவது முறையாக சாதனை!

புதுச்சேரி, மே 9- புதுச்சேரியில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்ப வம் பள்ளியில் தேர்வு எழுதிய 761 மாண வர்களும் தேர்ச்சி பெற்று 28ஆவது முறையாக சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில் இந்த பள்ளியைச் சேர்ந்த 761 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி செய்தியாளர் களிடம் கூறுகையில், மாணவர் சரவ ணன் உயிரியல் பாடப்பிரிவில் 600க்கு 595 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தை பெற்றுள் ளார். மாணவர்கள் சஞ்சய், சீனு உயிரி யல் பாடப்பிரிவில் 594 மதிப்பெண் பெற்று இரண்டாம் இத்தையும், மாணவர் அபினாஷ் உயிரியல் பாடப்  பிரிவிலும், மாணவி ரோஷினி வணிக வியல் பாடப்பிரிவிலும் 593 மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்தை பிடித்து ள்ளனர். 480 மாணவர்கள் 75 விழுக்காட் டிற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள் ளனர். 738 மாணவர்கள் 60 விழுக்காட் டிற்கு மேலும், 78 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து  28ஆவது முறையாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற அயராது பாடுபட்ட ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற்றோர் களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்து கொள்கிறேன். பள்ளி அளவில் முதல் மூன்று இடங் களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நானயங்கள் பரிசாக வழங்கப்படும் என்றார்.