states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குத்துச்சண்டையில் தங்கம்: முதல்வர் பாராட்டு

சென்னை, மே 20 - குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற வீரங்கனைக்கு தமிழ்நாடு முதல மைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சமூக வலை தளப்பதிவில், “பெண்க ளுக்கான உலகக்குத்துச் சண்டை தொடரில்  அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத்  சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர். நிசாமா பாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையி லான உங்களது வெற்றிக்கதை மேலும் பல  பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கை யுடனும் உறுதியுடனும் தொடரமிகச் சிறந்த  ஊக்கசக்தியாக விளங்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

3 கோவில்களில்  நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர்

சென்னை,மே 20 - சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து  சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இது தொடர்பாக  கூறியதாவது:- கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 விழுக்காடு பணிகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் இந்தாண்டு மானியக் கோரிக் கையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன் றாக செயல்படுத்தப்பட்டு பக்தர்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இக்கூட்டத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்க ளில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்  தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி. சந்திரமோகன், இந்து சமய  அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமர குருபரன், கூடுதல் ஆணையர்கள் ரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்க வாய்ப்பு

சென்னை,மே 20 - தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத் தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல்  9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்க ளுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்து 14 ஆம்  தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட் டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி  மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் 10, 11, 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்  பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு கள், பள்ளிகளின் உள்கட்ட மைப்பை மேம்ப டுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற் கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடு களையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதா லும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ள தாக கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்த நிலையில் ஜூன் 4வது  வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.