states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சனாதன ஒழிப்பு பேச்சுக்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது  வழக்கு பதிவுசெய்ய அனுமதி கோரி வினீத் அகர்வால் என்பவர்  தொடர்ந்த வழக்கு புதனன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி மீதான வழக்குகள் பொது நலம் சார்ந்தவை இல்லை. விளம்பரத்திற்காகவே வழக்குகள் பதிவு செய்  யப்படுகின்றன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி குறிப்பிட்டார்.

நிலம் விற்பனையின்போது மோசடி செய்த நபர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி நடிகை கவுதமி சென்னை காவல்  ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சுவாதி கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்  தமிழ்நாட்டில் உள்ள 10 சதவீதம் ரயில் நிலையங்களில்கூட  கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோகிலா(33) என்ற  பெண் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிய  நிலையில், செல்போன் சூடாகி வெடித்ததில் கோகிலா உயிரிழந்தார்.

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான  ஆர்.கே.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.  அவரை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்  றத்தை நாடுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து  அக்டோபர் 3அன்று மீண்டும் திறக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (64). இவர் கடந்த 6 மாதமாக அப்பகுதியை சேர்ந்த  6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 1098 என்ற ‘சைல்ட்  லைன்’ உதவி எண் மூலம் தானாக தொடர்புகொண்டு பழனிவேல்  மீது புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த புகாரில் சமூக நல அதி காரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக விசா ரணை நடத்தி, பழனிவேலை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர். பாலியல் தொல்லை குறித்து பெற்றோர் உள்ளிட்ட யாரிடமும் கூறாமல், தைரியமாக தானே ‘சைல்ட் லைன்’  எண்ணிற்கு 11 வயது சிறுமி புகார் அளித்திருப்பது பாராட்டைப்பெற்றுள்ளது.