states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குக!

பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை 

சென்னை, ஏப்.8- பல்லாவரத்தில் சனிக்கிழமை மாலை நடை பெற்ற  அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார்.  அந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசு கையில், மாநில அரசுக்கு தேவையான திட்டங் களை ஒன்றிய அரசு தரும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டும்  என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்.  வந்தே பாரத் ரயிலில் பயணிகள் டிக்கெட் கட்ட ணத்தைக் குறைக்க வேண்டும். சென்னை-மதுரை வந்தேபாரத் ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கவேண்டும். இந்தி யாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு தேவையான போதிய ரயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நெருக்கமாக மாநிலங்கள் தான் இருக்கிறது. மக்க ளின் தேவையை மாநில அரசுதான் நிறைவேற்ற முடியும் என்றார். சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டத்திற்கு  தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

‘கிறிஸ்தவர்களை விட இந்துக்களின் சேவை அதிகமாம்’

“ஆரோக்கியமான சமூகம் உருவாக சேவைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏதா வது ஒரு சமூகம் பின்தங்கி இருந்தால் நாட்டின் நலன் கருதி அந்த சமூகத்தை உயர்த்த  வேண்டும். பொதுவாக அறிவுஜீவிகள் சேவையைப் பற்றி பேசும்போது, கிறிஸ்தவ மிஷனரி களின் சேவையைத்தான் அவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,  ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளால் வழங்கப்படும் சேவை யைவிட, இந்து ஆன்மிக குருக்களால் வழங்கப்படும் சேவை அதிகம்’’ என்று ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பகவத் ஜெய்ப்பூரில் பேசியுள்ளார்.

‘5 மாநிலங்களால் 2024-இல் நாட்டின் எதிர்காலம் மாறும்’

“மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநி லங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்றம் ஏற்படும். 2024 க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும். இதை  நான் மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். இந்து, முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு,  தேர்தல் ஆதாயங்களுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை யை உருவாக்குவதுதான் பாஜக-வின் உண்மையான சக்தியாக இருக்கிறது. பாஜக-வின் இந் துத்துவா போலியானது” என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மதவெறுப்புப் பேச்சு: கர்நாடக பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிவு 

“கிறிஸ்தவர்கள் இந்த நிமிடம் வரை மதமாற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மதமாற்றம் செய்ய வருபவர்களை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா, கடந்த மார்ச் 31 அன்று தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, அரசு அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் அமைச்சர் முனிரத்னா மீது இரு வேறு மத மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், குற்றத்தை தூண்டுதல், மதரீதியாக விரோதத்தை வளர்த்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘கோ பேக் மோடி’ வாசகம்: 2 ஆயிரம் கருப்பு பலூன்கள் பறிமுதல்

சென்னை,ஏப்.8- பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விடுவதற்கு திட்டமிட்டிருந்த காங்கிரசாரிடமிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விடப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த 370 பலூன் களை பறிமுதல் செய்தனர்.இதே போன்று ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்பு  பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ‘கோ  பேக் மோடி’ என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.

ஐஎம்ஏ பரிந்துரையின்றி கிளினிக் நடத்த  அனுமதி இல்லை

சென்னை,ஏப்.8- இந்திய மருத்துவக்கவுன்சில் பரிந்துரையின்றி கிளினிக் நடத்த அனுமதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.  சமூக மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான டிப்ளமோ பட்டதாரிகள் சார்பில், கணே சன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்து கள் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ  பட்டம் பெற்றவர்கள் ஆரம்ப சுகாதார  கிளினிக் நடத்தி வருகிறோம். ஆனால்,  தமிழ்நாடு அரசும்,காவல்துறை யினரும் தங்களது அன்றாடப் பணி களில் தலையிட்டு, கிளினிக் நடத்து வதை தடுக்கின்றனர். நாங்கள் ஆரம்ப  சுகாதார கிளினிக் நடத்துவதை தடுக்க கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி  எம்.தண்டபாணி விசாரித்த போது,   அரசுத்  தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்  ‘தமிழ்நாடு கிளினிக் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, அரசின் அனுமதியின்றி கிளினிக் நடத்த  முடியாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று, அதை  சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சில்க ளில் பதிவு செய்திருந்தால் மட்டுமே கிளினிக் நடத்த முடியும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற  நீதிபதி, ‘‘இந்திய மருத்துவ கவுன்சில்  (ஐஎம்ஏ)அல்லது ஆயுஷ் துறையின் பரிந்துரை இல்லாமல் கிளினிக் நடத்த  மனுதாரர்களுக்கு உரிமை இல்லை’’ என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கணிதத்திற்கு கூடுதலாக  5 மதிப்பெண்

சென்னை, ஏப்.8- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி இம் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கலைஞர் எழுதுகோல்  விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.8- கலைஞரின் பிறந்த தினமான  ஜூன் 3 அன்று சிறந்த இதழிய லாளருக்கு “கலைஞர் எழுது கோல் விருது” வழங்கி கவுர விக்கப்படுகிறது.   அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதோடு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும். விண்ணப் பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.  இதழியல் துறையில் சமூக  மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற் காகவும், பெண்களின் முன் னேற்றத் திற்காகவும், பங்காற்றி யிருக்க வேண்டும். விண்ணப் பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர்  பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்ப லாம்.  இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரி வான தன் விவர குறிப்பு  மற்றும்  அவற்றுக்குரிய ஆவணங்களு டன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு 30 ஆம் தேதிக்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தாய்மொழிக்காக போராடும் குர்மி அமைப்புகள்; மேற்குவங்கத்தில் இதுவரை 225 ரயில்கள் ரத்து!

கொல்கத்தா, ஏப். 8 - குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க கோரி யும், தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணை க்க வலியுறுத்தியும் குர்மி மக்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் இருக்கும் இவர்கள், தங்களைப் பழங்குடியி னர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அர சியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்க ளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழங்குடியினர் அங்கீகாரம், சர்னா மதத்தை அங்கீகரித்தல் மற்றும் அரசிய லமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மலி  மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் 5 அன்று துவங்கிய குர்மி மக்களின் இந்தப் போராட்டம், தெற்கு தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் கிழக்கு மேதினிபூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.  தென்கிழக்கு ரயில்வேயின் முக்கிய வழித் தடங்களான காரக்பூர் - டாடாநகர் மற்றும் ஆத்ரா - சண்டில் வழித்தடங்களில் பல்வேறு குர்மி அமைப் பினர் ரயில்களை மறித்துப் போராட்டம் நடத்தினர்.  இதன்காரணமாக வெள்ளிக்கிழமையன்று  மட்டும் 64 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டம் துவங்கிய நாளி லிருந்து ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 225 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெக்சிகோவில்  “புதிய நாட்டுடமை”த் திட்டம்

மெக்சிகோ சிட்டி, ஏப்.8- இடதுசாரி ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடாரின்(ஆம்லோ) புதிய நாட்டுடமைத் திட்டத்தின்படி, ஸ்பெயின் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின்னுற்பத்தி ஆலைகளை மெக்சிகோ அரசு விலைக்கு வாங்கியுள்ளது. ஆம்லோவின் புதிய அறிவிப்பின்படி, 13 மின்னுற்பத்தி ஆலைகளை ஸ்பெயினின் இபெர்டிரோலா நிறுவனத்திடம் இருந்து 400 கோடி பவுண்டுக்கு விலை பேசியிருக்கிறார்கள். மின்னுற்பத்தியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆம்லோவின் திட்டப்படி, இந்தப் புதிய நாட்டுடைமைத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்குப் பிறகும், தனியார் நிறுவனங்களின் மின்னுற்பத்தி ஆலைகள் மெக்சிகோவில் இருக்கும். அதேவேளையில், இந்த 13 நிறுவனங்களும் நாட்டுடைமை ஆன பிறகு, சுமார் 55.5 விழுக்காடு மின்னுற்பத்தி அரசின் வசம் வருகிறது. பெரும்பாலான மின்சாரத்தைத் தயாரிக்கும் நிறுவனமாக அரசின் மின்னுற்பத்தி நிறுவனமான சி.எப்.இ. உருவாகியுள்ளது. அதோடு, மேலும் பல புதிய மின்னுற்பத்தி ஆலைகளை அரசு கட்டி வருகிறது. அந்த ஆலைகள் கட்டி முடிக்கப்பட்டு, உற்பத்தியைத் தொடங்கினால் 65 விழுக்காடு உற்பத்தி அரசின் வசம் போய்ச்சேரும். நாட்டின் மின்தேவையை நிறைவேற்ற வெளிநாட்டு நிறுவனங்களையே மெக்சிகோ நம்பியிருந்தது. இதை அகற்ற வேண்டும் என்று ஆம்லோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு முடிவு செய்து, புதிய திட்டத்தையும் அறிவித்தார். அதோடு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. தங்கள் பிடி தளர்வதால் அமெரி காவும் இந்தப் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உலகச் செய்திகள்

உனாசுர்(தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம்) அமைப்பில் மீண்டும் இணைவதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அறிவித்துள்ளார். அதற்கான ஆணை யிலும் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். மே 6, 2023 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. உனாசுர் அமைப்பை தனது தலைமையில் இரண்டாவது முறையாக அரசு அமைந்த போது அதைத் தொடங்குவதில் லூலா முக்கியமான பங்காற்றினார். மேலும் அர்ஜெண்டினா உள்ளிட்ட சில நாடுகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித் துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் தீர்வு எதுவும் ஏற்படாத நிலை யில், கூடுதலாக ஒரு ஆண்டுக்கு தடைகள் தேவைப்படுகின்றன என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஜோ பைடன் விளக்கி யுள்ளார். இந்தத் தடைகளை அப்படியே ஐரோப்பிய நாடுகள் பின் பற்றும். இவ்வாறு பின்பற்றப் போவதால் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நெருக்கடியும் தொடரும் என்று கூறப்படுகிறது.

சீனாவும், கம்போடியாவும் இணைந்து நடத்தி வரும் போர்ப் பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. ஐந்தாவது முறையாக இந்தப் பயிற்சிகளை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. பயிற்சியின் நிறைவு நாளன்று, சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் உயர் அதிகாரி களில் ஒருவரான வைஸ் அட்மிரல் வெய் வென்ஹுய் மற்றும் கம்போ டியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜெனரல் டீ பன்ஹ் உள்ளிட்டோர் வீரர்களைப் பாராட்டிப் பேசி னார்கள்.