states

மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக!

அவிநாசி, ஜூலை 24- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்  சம்மேளனம் (சிஐடியு) மின் கட்டண  உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன  சிஐடியு மாநில நிர்வாகி கள் கூட்டம் ஜூலை 21 அன்று ஈரோட் டில் மாநிலத் தலைவர் முத்துசாமி தலை மையில் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் அசோகன், மாநிலக் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் விசைத்தறி தொழிலா னது பல நெருக்கடிகளை சந்தித்துள்ள னர். தற்போது நூல் விலை குறைந் துள்ள போதிலும், விசைத்தறி தொழில் மந்தமான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் 30 சத விகிதம் வேலை இழந்து உள்ளனர். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வேலை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது அறி வித்துள்ள மின் கட்டண உயர்வு விசைத்  தறி தொழிலை மீண்டும் கடுமையாக பாதித்துள்ளது. தற்பொழுது விசைத்  தறி தொழிலுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைத்து வருகிறது.  இதனை 1000 யூனிட்டாக உயர்த்த  வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் மின்சாரக் கட்டணம் 70  பைசா உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரண மாக விசைத்தறித் தொழிலும், அந்த தொழிலை நம்பி வாழும் பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இலக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே, தமி ழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண  உயர்வை திரும்பப்பெற்று விசைத்  தறி தொழில் மற்றும் தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டும் என்று  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.