சென்னை,ஏப்.23- சேமநலநிதியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மாநிலப் பொதுச்செயலாளர் என். முத்து அமுதநாதன் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர் சேமநலநிதி ரூ.7லட்சத்தி லிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நீண்டநாள் கோரிக்கை யான உயர்நீதிமன்றத்தில் தமிழ், உச்ச நீதிமன்றக் கிளை ஆகியவை நிறை வேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி யதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கை களை வென்றெடுக்க அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.