states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லி - என்சிஆர் பகுதியில் வரம்பை மீறி   ஏழு முதல் எட்டு மடங்கு அதிகமான அளவில் காற்றின் தரம் குறைந்துள்ள நிலையில், போக்கு வரத்து மற்றும் நகரின் சட்டம் ஒழுங்கை நிர்வ கிக்கும் களத்தில் இருக்கும் காவல்துறையினர் முகக்கவசம் அணியுமாறு தில்லி அரசு உத்தர விட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம்  அலிகாரில் உள்ள ஒரு மருத்துவமனை யில் மருத்துவர் இல்லாத நிலையில், கம்ப வுண்டர் ஒருவர் அதிக அளவிலான ஊசி மருந்தை  செலுத்தியதால் ஐந்து மாத குழந்தை உயிரிழந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாயன்று முதல்  கட்ட வாக்குப்பதிவில் நக்சலைட்கள் ஆதிக்கம்  உள்ள கான்கேர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் மற்றும் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் காயமடைந்தனர். இந்த தாக்கு தல் சம்பவத்திற்கு நக்சலைட்கள் பொறுப் பேற்றுள்ளனர்.

ரூ.40 கோடி வங்கி மோசடி தொடர்பாக பஞ்சாப் ஆளும் கட்சி (ஆம் ஆத்மி) எம்எல்ஏ வான கஜ்ஜன் மஜ்ராவை பொதுக்கூட்டம் நடை பெறும் இடத்தில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கஜ்ஜன் மஜ்ரா தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை அதிகாரி மகன் உள்பட 8 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளார். மேலும் இவ்வழக்கில் தடயங்களைச் சேகரிக்கத் தவறியதாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ரோரன்வாலா குர்த் கிராமத்தில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட குவாட்கோப்டர் மற்றும் 250 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பிஎஸ்எப் படை கைப்பற்றியது. ரோரன்வாலா குர்த் கிராமம் சர்வதேச எல்லை யில் உள்ள பகுதி என்பதால் அங்கு பிஎஸ்எப் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து பிரேக் பழுதால் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் பயணிகள் கூட்டத்திற்குள் தறிகெட்டு சென்றது.  இந்த கோரச் சம்பவத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், ஒரு பெண், ஒரு சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.