states

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தனித்து போட்டி

ஈரோடு, ஜன.28- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்த லில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சனியன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமி ழர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஈரோடு  கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக  மகத்தான வெற்றிபெற்று எடப்பாடி பழனி சாமி தலைமைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும்.   அதிமுக இந்த இடைத்தேர்தலில் தனித்து களம் காண்கிறது. எங்கள் கூட்ட ணியில் இணையும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறி விப்பார்.  வாக்கு சேகரிக்கும் பணியை வெள்ளிக்கிழமையே துவங்கிவிட்டோம். எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார்.