சென்னை, அக.15- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவ தூறகப் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு, பொதுக்கூட்டம் நடத்தி அதில் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டார். இதையடுத்து அவரது மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமு.க சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகப் பேசி யுள்ளார். இது குறித்து திமு.க ஒன்றிய செயலா ளர் வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் குமர குரு மீது நான்கு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லினை ஆபாசமாகப் பேசியதற்காக அதே இடத்தில் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தி குமரகுரு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அக்.10 அன்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் குமரகுரு கலந்து கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இதையடுத்து கள்ளக்குறிச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்-1 முன் சனிக்கிழமை விசாரணை அதிகாரி வி.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் குமரகுரு ஊரில் பொதுக்கூட் டம் நடத்தி மன்னிப்பு கேட்டதால், இந்த வழக்கு ரத்துச் செய்யப்படுவதாக தெரிவித்தார்.