states

100-நாள் வேலைத்திட்டத்தை பாதிக்கும் அரசாணை 48-ஐ உடனே திரும்பப்பெற வேண்டும்

சென்னை, ஏப்.11- 100-நாள் வேலைத்திட்டத்தை பாதிக்கும் மாநில அரசின் அரசா ணை எண் 48-ஐ உடனே திரும்பப் பெற வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு பிறப்பித்துள்ள அர சாணை எண்: 48-இல் (30.3.2022) 100 நாள் வேலைக்கான நிதியில் ரூ.17 கோடியை எடுத்து உணவு தானியக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டநிதியை தவறாகப் பயன்படுத் தும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இதை உடனடி யாக வாபஸ் வாங்கவேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

அரசாணையில் தமிழகத்தில் 50 இடங்களில் உணவுதானியக் கிடங்கு கள் அமைக்கப்படும் என்றும் அதற் கான நிதி ரூ.17 கோடி மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக திட்ட நிதியி லிருந்து எடுக்கப்படும் என கூறப் பட்டுள்ளது. மேலும் இந்த நிதியில் 75 சதவீதம் கட்டுமானப் பணிகளுக்கும் 25 சதவீதம் தொழிலாளர்களின் கூலிக்கும் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகத் தவறான முன்னுதாரணம். இதை தமி ழக அரசு வாபஸ் வாங்கவேண்டும். கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதியில் கட்டுமானப் பணி களுக்கு 25 சதவீதத்திற்கு மேல் எடுக்கக்கூடாது என்று ஒன்றிய அரசின் 2005-ஆம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி எடுத்தால் அது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து விடும். இது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். எனவே திட்டத் தின் நிதியை கட்டுமானப்  பொருட் களை வாங்குவதற்கும், காண்ட் ராக்ட் அடிப்படையில் செய்வதற்கும் இடமளித்தால் நிதியின் பெரும்பகுதி தவறுதலாக சட்டத்தின் நோக்கத் திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் நிதி படிப்படி யாக கட்டுமானத்திற்கும் காண்ட்ரா க்ட்டிற்கும் இயந்திரங்களை வைத்து  வேலை செய்வதற்குமாக மடை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபின் ஏறத்தாழ நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மாறாக இந்தத் திட்டத்தையே சிதை க்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.  அதனால் தான்  100 நாள் வேலைத் திட்டத்தை ஆய்வு செய்த நாடாளு மன்ற நிலைக்குழு, திட்டத்தின் நோக்கங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. வேலை நாட்களும் வேலைக்கான சட்டக்கூலியும் முழுமையாக அமல் படுத்தப்படவில்லை. முறைகேடும் நடந்துள்ளது.

இதை உடனடியாக ஒன்றிய அரசு களைய வேண்டு மென  ஒன்றிய பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. எனவே ஒன்றிய அரசு இப்பிரச்ச னையில் தலையிட்டு பெரும்பகுதி யான இயந்திரப் பயன்பாட்டைத் தடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு அதிக நிதி எடுப்பதைத் தடுக்க வேண்டும். பெரும்பகுதியான நிதியை தொழிலாளர்களின் கூலி க்கு ஒதுக்க வேண்டும். சட்டக்கூலி யையும் உயர்த்தி வேலை நாட்களை யும் அதிகரிக்க வேண்டுமென நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாண்டுகள் ஆட்சி செய்த அதி முக அரசு இதே தவறுகளைச் செய்து வந்தது. அதனால் தான் தமிழ்நாட் டில் 100 நாள் வேலையில் 45 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை என தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதையெல்லாம் கடந்த காலங் களில் சுட்டிக்காட்டி வந்தது திமுக. தற்போது அதே போன்றதொரு தவறு தமிழகத்தில் தொடர்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன் இதற் கான எங்களது ஆட்சேபணையை யும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் விவசா யத்திற்கென தனி பட்ஜெட், அதற் கான நிதி ஒதுக்கீடும் இருக்கும் போது அதிலிருந்து நிதிகளை எடுப்ப தற்குப் பதிலாக ஏற்கனவே பாதிக்கப் பட்டுள்ள 100 நாள் வேலைத் திட்ட நிதி யை எடுத்து உணவுக் கிடங்குகள்  அமைப்பது தவறான முன்னுதார ணம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.