states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தேர்தல் முடிந்தது சிலிண்டர் விலை உயர்ந்தது 

 சென்னை, டிச.1 - ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற  தேர்தல் முடிந்த  நிலையில் வணிகப்  பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,942  ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால்  சென்னையில் ரூ. 1,942-க்கு விற்கப் பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், வெள்ளிக்கிழமை (டிச.1)  முதல்  ரூ. 1,968 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த  மாற்றமும் இன்றி 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர் மழை:  1,500 ஏரிகள் நிரம்பி

சென்னை, டிச.1 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும்  பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. அளவுக்குத்தான் மழை  பெய்துள்ளது. அதாவது 9 சதவீதம்  குறைவாக உள்ளது. இதன் காரண மாக பல்வேறு மாவட்டங்களில் ஏரி, குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,500  ஏரிகள் மட்டும் தான் 100 விழுக்காடு  முழுமையாக நிரம்பி உள்ளன. 2 ஆயிரம் ஏரிகள் 75 விழுக்காடு அளவுக்கு தான் நிரம்பி இருக்கின் றன. இதுதவிர 2 ஆயிரம் ஏரிகள் 50 விழுக்காடு, 3 ஆயிரம் ஏரிகள் 25 விழுக்காடும் நிரப்பி உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியா குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில்  அதிக அளவு மழை பெய்த காரணத் தால் இந்த மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு  மழை பெய்யாததால் இன்னும் ஏரிகள் நிரம்பாமல் தான் உள்ளன. இந்த மாதம் (டிசம்பர்) மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் ஓரளவு மழை பெய்தால் ஏரிகள் இன்னும் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

“மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் முயற்சி”: அமைச்சர்

சென்னை, டிச.1 - தமிழ்நாடு அரசு சார்பில்  அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களை கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்க ஆளுநருக்கு  உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத் தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், 10 மசோதாக் களுக்கு ஆளுநர்தான் ஒப்புதல் அளித்தே ஆக  வேண்டும் என்ற கட்டாயம்  ஏற்பட்டுள்ளது. மசோதாக் களை குடியரசுத் தலை வருக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி  ஒரு செய்தியை தெரிவித் துள்ளது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத் தடிக்கும் முயற்சியாகும் என்றார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்கள்! தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 1 - குழந்தைத் திருமணங்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களை யும் வகுத்துள்ளது. ஆனால், இந்த சட்டங்களைப் பொருட்படுத்தாமல் சிதம்பரம் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளு க்குத் திருமணங்கள் செய்து வைக்கின்றனர்.  எனவே, இந்த குழந்தைத் திரும ணங்களைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செய லாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிலேயே, தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் மகா தேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொது தீட்சி தர்களை வழக்கில் எதிர்மனுதார ராக சேர்க்குமாறும் நீதிபதிகள் உத்தரவிடப்பட்டு உள்ளது.