சென்னை,மே 30- ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல் படுத்தவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வலியு றுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13வது பட்ட மளிப்பு விழா திங்களன்று (மே 30) நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநரு மான ஆர்.என். ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில், பலவி தமான யோசனைகளை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தெரி வித்தனர். நம்மிடம் தற்போதுள்ள கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் தேசத்தை பார்த்த பார்வை சரியாக இல்லை. ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்வி கொள்கையை அணுகியிருக்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக நாம் நம்மிடையே உள்ள பிரிவினை களையே அதிகமாக பார்த்திருக் கிறோம். பல்வேறு வேறுபாடுகள், பிரி வினைக் கருத்துகள் தோற்றுவிக் கப்பட்டிருக்கிறது. புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த அனைவரும் முன்வர வேணடும். திறந்தநிலை பல்கலைக்கழகமும் அந்த கொள்கையை அமல்படுத்த வேண்டும். படிப்பை பாதியில் கை விட்டாலும் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் உள்ளன என்றார் ஆளுநர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, இடைநின்ற மாணவர்கள் மீத முள்ள படிப்பை திறந்த நிலை பல்கலை க்கழகத்தில் தொடர ஆளுநர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திரா விட மாடல். இதில் ஆளுநருக்கு மாற்று கருத்து இருக்காது என்றார்.