சென்னை, செப். 27 - போக்குவரத்து ஓய்வூதி யர்கள் நடத்தி வந்த காத்தி ருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களாக உயர்த் தாமல் உள்ள அகவிலை ப்படியை உயர்த்த வேண் டும், மருத்துவப்படி 300 ரூபாயாக உயர்த்துவ தோடு, மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.26 அன்று போக்குவரத்து ஓய்வூதி யர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி னர். இரண்டாவது நாளாக புதனன்று (செப்.27) இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய நல அமைப்பின் பொதுச்செய லாளர் கே.கர்சன் கூறிய தாவது: அகவிலைப்படி உயர்வு வழங்காததால் ஒவ்வொரு ஓய்வூதியருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள் ளது. அகவிலைப் படியை உயர்த்தினால் அரசுக்கு மாதம் ரூ.29 கோடி செல வாகும். அதன்படி ஓய்வூதி யர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பறித்துள் ளது. அந்த தொகையை வழங்க கோரி போராடு கிறோம். இந்த போராட்டத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர் பி.உமா நாத் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நிதித்துறை செயலாளர் விடுமுறையில் உள்ளதால், அவருடன் கலந்து பேசிய பிறகு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும் என்று தெரிவித்து போராட் டத்தை ஒத்தி வைக்க அதி காரிகள் கோரினர். அதனை யேற்று அக்.6 ஆம் தேதி வரை போராட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.