states

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை,ஜூன் 6- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகி யோர் திங்களன்று (ஜூன் 6)பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள  காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ். சவுந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க  உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பரிந்துரைத்தது. முதல் கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகி யோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து பதவியேற்றனர். இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல்  நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள் ளார். இரு புதிய  நீதிபதிகளும், திங்களன்று(ஜூன்6) பதவி யேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், புதிய நீதிபதிகளை, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். அப்போது அவர்கள், புதிய நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.