states

திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது

கோவை மாவட்டம் விளாங் குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட்  நிலத்தை கோவிந்தசாமி என்பவரிட மிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ்  உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்த ரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படை யில் பட்டா வழங்க தாசில்தார் உத்த ரவு பிறப்பித்த நிலையில், அதை வரு வாய் கோட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்த ரவிட்டார். இதை எதிர்த்து அவரது வாரிசு கள் சிவராஜ், பாலாஜி, கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொட ர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலத்தை மீட்கஉத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் முன்பு புதன்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழக அர சின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராமன் லால், அறிக்கை ஒன்றை தாக்கல்செய் தார். அந்த அறிக்கையில், உயர்நீதி மன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது. அதன்பின்னர் நேரில் சென்று மீண்டும்  ஆய்வு செய்தபோது, அங்கு சிங்கா நல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலை வர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை கட்டி உள்ளது  தெரிய வந்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி  பிறப்பித்த உத்தரவில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அந்த நிலத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளனர். இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அரசு நிலம் சட்டவிரோதமாக அபகரிக்கப் பட்டு, மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நிலத்தில் சட்ட விரோதமாக குடியிருந்தவர்கள், அதன் பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தா லும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது. பொது ஊழியர் என்ற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். இந்த  வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன் பாட்டுக்கு தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி,பி ன்னர்  அதுகுறித்தான  அறிக்கையை நவம்பர்  4-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தர விட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.