திருவனந்தபுரம், ஜுன் 9- கேரள முதல்வர் பினராயி விஜய னுக்கு எதிராக சதி செய்த தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட சொப்னா சுரேஷ், பி.சி.ஜார்ஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கே.டி. ஜலீல் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் 120பி மற்றும் 153 ஆகிய பிரிவு களின் கீழ் கிரிமினல் சதி மற்றும் கல வரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சொப்னாவும் இரண்டாவது குற்றவாளியாக ஜார்ஜ்-ம் குறிப்பிடப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நட வடிக்கை துணை இயக்குநரின் சட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க ஏடிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் படும் என்று காவல்துறைத் தலைவர் அனில் காந்த் தெரிவித்தார்.
தங்கக் கடத்தல் வழக்கில் முதல் வர், அவரது மனைவி, மகள், முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ, சி.எம். ரவீந்திரன், கே.டி.ஜலீல் எம்எல்ஏ ஆகி யோருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா புதனன்று (ஜுன் 8) ஊட கங்கள் முன் குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து சோலார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.சி.ஜார்ஜ் மற்றும் சரிதா எஸ்.நாயர் இடையே தொலைபேசியில் உரை யாடல் நடந்தது. இதன் மூலம் இந்த வழக்கில் சதி இருப்பது தெரியவந் தது. உரையாடலில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா மற்றும் சரித் தன்னைப் பார்க்க வந்ததாக ஜார்ஜ் ஒப்புக் கொண்டார். ஊடகங்களில் இதை உறுதிப்படுத்தினார். சதித்திட்டத்தின் அடிப்படையில் பொய்யான குற்றச்சாட்டுகளை சொப்னா கூறுகிறார். சொப்னா அரசி யலாக தன்னையும் கேரளாவில் உள்ள எல்.டி.எஃப் அரசாங்கத்தை யும், குறிப்பாக முதல்வர் பினராயி விஜயனைக் களங்கப்படுத்துகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜார்ஜ் சதி செய்ததற்கான ஆதாரம் குரல் பதிவில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டவிரோதமாக சீர்குலைத்து அவ தூறு செய்யும் முயற்சி இது. பொய்யின் மூலம் நாட்டில் கல வரத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என ஜலீல் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
முன்ஜாமீன் கோரி சொப்னா சுரேஷ் மனு
முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தில் தங்கம் கடத்தல் வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ், உயர் நீதிமன்றத்தில் முன்ஜா மீன் மனு தாக்கல் செய்துள்ளார். முதல் வருக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுமாறு ஷாஜி கிரண் மிரட்டிய தாக சொப்னா தெரிவித்துள்ளார்.