உயர்நீதிமன்றம் பரிந்துரை
மதுரை, ஜூலை 5- பொறுப்பற்ற முறையில் செயல் பட்ட சமையலர் பணி தேர்வுக்குழுவின் மீது தமிழகத்தின் முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மை யினர் நலத் துறையின் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத் தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதி யில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில் பணி நியமன ஆணையை வழங்கக்கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக செவ்வாயன்று விசாரணை க்கு வந்தது. அரசு தரப்பில், “மொத்தம் 954 பணி யிடங்களுக்கு 3 கட்டங்களாக பணியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியில் சேர்ந்தவர்க ளில் பலருக்கு அனுபவ அறிவு குறை வாக உள்ளது என்றும், அவர்கள் சமைக்கும் உணவு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என மாண வர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதோடு விடுதியில் தூய்மை பணியா ளர்களாக பணியாற்றுவோர் தங்க ளுக்கு சமையலர் பணியை வழங்கவும், அதுவரை சமையலர் பணிக்கு நபர்களை தேர்வு செய்ய தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டது. அதன் பின்னரும் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வுக் குழுவின் தலைவர் சமையலர் பணிக்கான தேர்வு அறிவிப்பை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்” என தெரி விக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நீதிபதி, 2021 நவம்பர் மாதம் பணியில் நியமனம் செய்யப்பட்டவர்களின் அனுபவ அறிவை பரிசோதிக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலா னவர்கள் அனுபவ அறிவு குறைந்த வர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு விரைவாக எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆகவே தேர்வுக்குழு தலைவர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது மனுதாரர்களுக்கும், அரசுக்கும் தேவையற்ற செலவையும், சிரமத்தை யும் ஏற்படுத்தும். குழுவின் பணி உரிய நபர்களை தேர்வு செய்வதே. இது தேர்வு குழுவின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், இரக்கமற்ற செயல் என்றும் நீதி மன்றம் கருதுகிறது. ஆகவே தமிழ கத்தின் முதன்மை செயலர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலர்கள் தேர்வுக் குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டார்.