states

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

சென்னை, மார்ச் 27- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் மின்வாரிய பணி யாளர்களின் நிலுவையில் உள்ள நீண்ட கால கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற முன்வர வேண்டு மென தமிழக அரசை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த நான்கு ஆண்டு களாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மின் நுகர்வோர் சேவை தடைப்பட வாய்ப்புகள் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த பணியிடங்களை நிரப்பிடாமல் அவுட்சோர்சிங் முறைக்குச் சென்ற பொழுது மின்வாரிய ஊழியர்கள் போராடி உத்தரவைத் திரும்பப் பெற வைத்தனர். ஆனால், தற்போது 50க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என அனைத்திலும் அவுட்சோர்சிங் முறைக்கு மின்வாரிய நிர்வாகம் செல்வது படித்த வேலையில்லாத இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற செயலாகும். மின்வாரியத்தில் பல ஆண்டு களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். திமுக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் பொதுத்துறையில் பத்தா ண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் படுத்துவோம் என்று சொன்ன வாக்கு றுதியை உடனடியாக அமலாக்க வேண்டும்.

மின்வாரியத்தில் பதவிகளை அனுமதிக்காமல் ரீடி டிப்ளாய்மெண்ட் முறைக்குச் செல்வது சரியல்ல எனச்  சுட்டிக்காட்டப்பட்டதோடு, மின்வாரிய பணியாளர்களுக்கு கடந்த 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக பேசி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டுமென வும், மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட தமிழக அரசிற்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை கள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே கடந்த 12.04.2022 அன்று மின்வாரிய தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான ஆணை ஒன்றும் மின்சார வாரியத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டுமெனவும், 12.04.2022 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்த ஆணை 2-ஐ ரத்து  செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை களை முன்வைத்து மின்சார வாரி யத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து செவ்வா யன்று (மார்ச் 28) ஒரு கூட்டுப் போராட்ட த்தை நடத்துவதோடு, தமிழக முதல் வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளனர். எனவே, தமிழக முதல்வர் இப்பிரச் சனையில் நேரடியாக தலையிட்டு மின் வாரிய தொழிலாளர்களின் கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். மேலும், மின்சார வாரிய  ஊழியர்கள் ஒன்றிணைந்து நடத்து கின்ற பேரணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தோழமை ஆதரவையும் தெரிவிக்கிறது.

;