states

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்க கோரிக்கை ஏற்பு பரமக்குடி சிறுமி கும்பல் வல்லுறவு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

சென்னை, மார்ச் 9- பரமக்குடியில் 9-வது படித்து வந்த  சிறுமி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்  கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு காவல்துறை உத்தர விட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு  படித்து வந்த சிறுமியை, சமூகவிரோதக் கும்பல் ஒன்று கடத்திச் சென்று மிரட்டி பல  மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. இதில் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகே, அவரது பெற்  றோருக்கு உண்மை தெரிய வந்துள்ளது.  பெரும் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்க ளின் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்து பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், பரமக்குடி நகர் அதிமுக அவைத் தலைவரும், பரமக்குடி நகராட்சிக் கவுன்சிலருமான சிகாமணி, மறத்தமிழர்  சேனை என்ற அமைப்பின் தலைவர் புது மலர் பிரபாகர், ராஜா முகமது, இவர் களுக்கு உடந்தையாக இருந்த- சிகா மணியின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த கயல்விழி, உமா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 9-ஆம் வகுப்புச் சிறுமி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்ப வத்தில், இந்த 5 பேர் மட்டுமல்லாமல், பர மக்குடி நகரின் முக்கியப் புள்ளிகள் பல ருக்கும், காவல்துறையில் உள்ள சில ருக்குமே கூட தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில், முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் ஒருவர்  கூட தப்பிவிடாத நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கேற்ப இந்த வழக்கை  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்  டும்; பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத் திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மாதர் சங்கத் தலைவர்கள்  எஸ்.வாலண்டினா, ஆர். ராதிகா ஆகி யோர் வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டமும் நடைபெற்றது. பரமக்குடியிலுள்ள வர்த்த கர்கள் கடையடைப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, பரமக்குடி சிறுமி கும்பல் வல்லுறவு வழக்கில், சிறப்புக் கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் வகையில், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.