சென்னை, மார்ச் 12- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி யை பயன்படுத்துவது தொடர்பாக மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் எஸ்.சி.,எஸ்.டி மக்க ளுக்கு செய்யப்பட்டுள்ள வஞ்சகம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விமர்சித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: வர்ணாஸ்ரம அணுகுமுறையை ஒவ்வோர் பிரச்சனையிலும் வெளிப் படுத்தி வரும் ஒன்றிய அரசின் அடுத்த அஸ்திரமாக இந்த வழிகாட் டல்கள் பட்டியல் சாதி, பழங்குடி மக்களை குறி வைத்திருக்கிறது. எம். பி.க்கள் தொகுதி மேம் பாட்டு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் வாழ்விடங்களுக்கு முறையே 15 விழுக்காடு மற்றும் 7.5 விழுக்காடு செலவிட வேண்டும் என்பது கட்டா யம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல் கள் முந்தைய வழிகாட்டல்களை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. “கட்டாயம்” என்று இருந்ததை அகற்றி “விரும்பத்தக்கது” என்று மாற்றப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும், மாநி லங்களவை உறுப்பினருக்குமான ரூ.25 கோடி எம்.பி நிதி மேம்பாட்டு நிதியில் 15 சதவீதம் ரூ.3.75 கோடி பட்டியல் சாதி மக்கள் பகுதிகளுக் கும், ரூ.1.87 கோடி பழங்குடி மக் கள் பகுதிகளுக்கும் செல்விடப்பட வேண்டும் எனில் என்ன பொருள்? மொத்தம் 800 நாடாளுமன்ற, மாநி லங்களவை உறுப்பினர்கள் நிதி யில் இருந்து பட்டியல் சாதி மக்கள் பகுதிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி, பழங்குடி மக்கள் பகுதிகளுக்கு ரூ. 1500 கோடி செல்விடப்பட வேண் டும் என்பதே. “கட்டாயம்” என்கிற வழி காட்டல் “விரும்பத்தக்கது” என்று நீர்த்துப் போயிருப்பது வெறும் வார்த்தை அல்ல... பல்லாயிரம் கோடி ரூபாய் பறிக்கப்படுவது ஆகும். எனவே விரும்பத்தக்கது என்று புதிய வழிகாட்டல்களில் உள்ளதை உடனடியாக அகற்றி எஸ்.சி.,எஸ்.டி மக்களுக்கான நிதி முறையாக செலவு செய்யப்படு வதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.