சென்னை,நவ.3- ராம்குமார் மரணம் குறித்த மாநில மனித உரிமை ஆணைய அறிக்கை மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு அனுப்பி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலா ளர் கே.சாமுவேல்ராஜ், முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறி யிருப்பதாவது: செப்டம்பர் 2016 இல் புழல் சிறையில் சந்தேகத்திற்கு இட மான முறையில் இராம்குமார் மரணம் அடைந்த பிரச்சனை மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் (SHRC)விசாரணை அறிக்கை 31.10.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலைய ஸ்வாதி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டதும், அங்கு அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டதும் தாங்கள் அறிந்ததே. அப்போதே இராம்குமார் மரணம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. போராட்டங்கள் நடந்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் அதில் பங்கேற்று நீதி கோரினோம். தற்போது மாநில மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை கீழ்க்கா ணும் விசாரணை முடிவுகளை தெரிவித்து சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.
1) ராம்குமார் மரணம் மீது சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2) அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுகிறது. தற்கொலை செய்து கொண்டாரா? வேறு யாரும் மின்சாரத்தைப் பாய்ச்சினார்களா? எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை சொன்ன காரணமா? என்பதை அறிய வேண்டும்.
3) காயம் எண் 9 அவராக ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்கிற அம்சம் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
4) ராம்குமார் தற்கொலை முடிவுக்கு சென்றதற்கான வலுவான காரணங்கள் சிறை நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்படவில்லை.
5) சிறையில் இருக்கிற கைதியின் பாதுகாப்பிற்கு சிறை நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.
6) ஆணையத்தின் புலனாய்வு பிரிவு, ஜுடிசியல் மாஜிஸ்டிரேட், விசாரணை அலுவலரின் இறுதி அறிக்கை ஆகியவற்றின் மீது திருப்தி ஏற்படவில்லை.
7) ராம்குமார் தந்தை பரமசிவம் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இத்தகைய பரிந்துரைகள் மாநில மனித உரிமை ஆணைய அறிக்கையில் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாநில மனித உரிமை ஆணைய அறிக்கை அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இராம்குமார் தந்தை பரமசிவம் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்; ராம்குமார் மரணம் பற்றி சுயேட்சையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும்; ஸ்வாதி படுகொலை வழக்கு பற்றிய உண்மைகள் முழு மையாக வெளிவர வேண்டும்; சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவராக இருந் தாலும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். தங்களின் விரைவான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.