உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை ஒழிப்பு, மக்கள் ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவரும், சமூக நீதிக்கான போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டு மெனவும், அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரசு நட வடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 22.10.2022 அன்று முதலமைச்சருக்கு கோரிக்கை அளித் திருந்தோம். இதனை ஏற்று கவிஞர் தமிழ்ஒளி ஆற்றிய இலக்கியப் பணிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இன்றைய இளைய தலைமுறையினர் அறியும் வகை யிலும் அவரது நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்க வும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவி க்கும் வகையில் மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50லட்சம் வைப்புத்தொகை வழங்கியும் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளதை வரவேற்பதோடு, நன்றி யினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.