புதுதில்லி, ஜூன் 13- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்கா ளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றா லும் இது கட்டாயமாக்கப்படாது எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை யும் மீறி நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு 6 முக்கிய சீர்திருத்த திட்டங்களை அனுப்பி யுள்ளது.
தகுதியுடையவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய நான்கு கட்ஆப் தேதிகள் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்து, அவர்களை வாக்கா ளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நன்கொடைகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்காதது, பெயர் மாற்றம், தலைமை யகம், அலுவலகம், முகவரி மாற்றம் குறித்து தெரிவிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிகளை மீறிய 21,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது கடந்த மாதம் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை யுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், வாக்காளர் அடையாள அட்டை யுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும்.