நம் வீட்டில் வளர்ந்த மரம். அதன் நிழ லில் இளைப்பாறி இருப்போம். அதன் அடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்திருப்போம். அதன் கனி களை உண்டு வளர்ந்திருப் போம். அதன் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி விளையாடி இருப்போம். ஆனால், அதன் வேர்களை அறிய முற்பட்டி ருக்க மாட்டோம்! கவிஞர் ப.வெங்கடேசன் அந்த வேர்களை அறிய முற் பட்டதன் விளைவுதான் இந்த நூல். ஆம்! கவிஞர் ஜீவி என்னும் நம் ஊரில் வளர்ந்து, இன்று தமிழ்கூறும் நல்லுலக்கெல் லாம் கிளைபரப்பி நிற்கும் பெரும் இலக்கி யவாதி மட்டுமல்ல, ஓர் இலட்சியவாதியின் வாழ்வின் பக்கங்களை முடிந்த அளவு சுண்டக் காய்ச்சி சுவையாய் முன் தந்து, அந்தச் சுவை அறிந்த இலக்கியவாதிகள் கந்தர்வன், ஸ்ரீரசா, மேலாண்மை பொன்னுச் சாமி, நீலா இவர்களின் கடிதங்களை பின் இணைத்து, கவிஞர் ஜீவி பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் வகையில் நூலைத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், தொழுநோய் ஒழிப்புப் போராளி, பட்டிமன்றப் பேச்சாளர் என்ற பன்முகங் கொண்ட கவிஞர் ஜீவியை அறிந்து கொள்வதென்பது, நம் நேர்மையை நாமே உர சிப் பார்த்துக் கொள்வதற் கான ஓர் வழி. மேலும் அறம் சார்ந்து, மக்கள் நலன் சார்ந்து நாம் முன் னெடுக்க வேண்டிய பணி களை தலையில் அன்பா ய்க் குட்டி ஞாபகப்படுத் தும் ஓர் ஆசிரியப்பணி. இதில் மிகுந்த பாரா ட்டுக்குரியவர் இந்த நூலின் ஆசிரியர் தோழர் ப.வெங்கடேசன் அவர்கள். நம் மண் சார்ந்த மனிதர்களைத் தேடி அவர்களை ஆவ ணப்படுத்தத் தொடங்கியிருக்கும் அரும் பணி என்பது நிச்சயம் வரலாறு கை கொடு த்து வாழ்த்துச் சொல்லும் பணியாக கொண்டாடப்படும். ‘‘ஒரு ரயில் இன்ஜினாய், எப்பொழு தும் இயங்கு, கூடவே பலரைச் சேர்த்துக் கொண்டு உற்சாகமாக கூவிக்கொண்டு’’ கவிஞர் ஜீவியின் இந்தக் கவிதை யைப் போல இந்த நூலும் நம்மையும் ஓர் ரயில் இன்ஜினாய் இயங்க வைக்கும்!
நான் சந்தித்த
மன்னர்களில்- ஜீவி
ஆசிரியர்: ப.வெங்கடேசன்
தொடர்புக்கு:7094000253