states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் லோதியில் உள்ள நீதிமன்றத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி குர்பிரீத் சிங் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 

பஞ்சாப் சட்டமன்றத்தில் விவசாயிகள் போராட்ட பிரச்சனைக்கு விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சேவைக் கட்டண பிரச்சனையில் பாரத்  மேட்ரிமோனி உள்ளிட்ட 10 நிறுவனங் களின் செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து வெள்ளியன்று நீக்கியது கூகுள்.

பெங்களூருவில் உள்ள இந்திரா நகர்  பகுதி யில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெள்ளியன்று மதியம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

“குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியாயங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

“உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80  தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடி யுங்கள்; அக்கட்சியை அகற்றுங்கள் எனும் கோஷ த்தை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று சேர்ப்பார்கள்” என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

“எல் நினோ” எனப்படும் பசிபிக் கடல் வெப்ப நீரோட்ட நிகழ்வு நடப்பு கோடையிலும் நீடிக்க உள்ளதால், இவ்வாண்டு இந்தியாவில் கோடை  காலம் வழக்கத்தைவிட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும். அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பமும் குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.