ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் காய்கறி மார்க்கெட் செயல் பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கிருஷ் ணகிரி, ஆந்திரா, தாள வாடி, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும் 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்ப னைக்கு வந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக் கப்பட்ட நிலையில், வரத்தும் குறைந்து வருகிறது. இதன் எதிரொலி யாக காய்கறிகளின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு புதனன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து 1,500 பெட்டிகள் மட்டுமே தக்காளி விற்ப னைக்கு வந்தது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.10க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.25க்கு விற்பனையானது.
கோவை, டிச.14- மழையால் பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிக ரித்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை, மருதூர், திம்மம் பாளையம், கண்டியூர், வெள்ளியங் காடு, தோலம்பாளைம், தேக்கம் பட்டி ஆதிமாதையனூர், கணு வாய்ப்பாளையம், இடுகம்பா ளையம், பெள்ளேபாளையம், ஜடை யம்பாளையம், தோலம்பாளைம் உள்ளிட்ட பகுதியில் கத்தரி, வெண்டை, பாவக்காய், சுரக்காய், தக்காளி, சின்னவெங்காயம், அவரை உள்ளிட்ட காய்கள் அதிக ளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், மேற்கண்ட பகுதி களில் தக்காளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. மேலும், பனிப்பொழிவு அதிக ளவில் இருந்து வருகிறது. இத னால் தக்காளி செடிகள் கருகி வரு கின்றன. மழை, பனி என கால நிலை மாறி மாறி வருவதால் தக்காளியில் புள்ளி விழுந்து அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் வரத்து அதிகரிப்பால் 25 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை ரூ. 400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இதனிடையே கடந்த 2 நாட்களாக தொடர் மழை காரணமாக செடியிலேயே தக்காளி அழுகி வருதவால் வரத்து குறைந் தது. இதனால் தற்போது 25 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை ரூ. 730 விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இதனால் கடந்த 2 நாட்க ளிலேயே 1 கிலோ தக்காளி ரூ. 32க்கு சில்லறை கடைகளில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அதேசமயம் தக்காளி செடிகள் கருகி வருவது விவசாயி களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.