ஆசியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்சிப் போட்டி யில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி காமாட்சி 2 தங்கப் பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.
சிதம்பரம், நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரி சனம் செய்ய அனுமதித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அர சாணைக்கு தடை விதிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தவறான தொலைபேசி எண்களால் நாளுக்குநாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கிக் கணக்கு மூலம் ரூ.5 அனுப்பி ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவையை தொடரும் வகை யில், போலீஸ் உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டி யலில் 100வது இடத்துக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி.
உலகச் செய்திகள்
சோமாலியாவில் நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரபு ஒன்றியம் தனது படைகளை அந்நாட்டில் நிறுத்தியிருந்தது. சோமாலிய ராணுவத்தின் முகாம்களை இந்தப் படைகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டன. தற்போது அந்த முகாம்களை ஒவ்வொன்றாக சோமாலிய ராணுவத்திடம் திரும்பவும் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக இரண்டு முகாம்கள் ஒப்படைக்கப்பட்டன. இதோடு, இதுவரையில் நான்கு முகாம்கள் மீண்டும் சோமாலிய ராணுவத்தின் வசம் வந்துள்ளன.
துணை ராணுவப் படைகளை எதிர்த்துப் போரிடுமாறு சூடான் மக்களை அந்நாட்டு ராணுவம் கோரியிருக்கிறது. அந்நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையிலான மோதல் தொடங்கி 12ஆவது வாரத்தை எட்டியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இந்நிலையில் தங்கள் பக்கம் நிற்குமாறு மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரமான கிராமாடோர்ஸ்க்கில் உள்ள உணவகம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தத் தாக்குதலைத் தங்கள் ராணுவம் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுப்புத் தெரி வித்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை” என்று கூறினார்.