மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் என்பவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, மயக்கமான நிலையில் தனது தந்தையுடன் செல்போனில் பேசியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு என்ன ஆனது என தெரியாமல் போனது. இதையடுத்து தந்தை ஹெலராம் மாலிக், 230 கி.மீ. பயணித்து, பாலசோருக்கு வந்து மகனைத் தேடிப்பார்த்தார். எந்த மருத்துவமனை யிலும் மகனைப் பார்க்க முடியாத நிலையில், பகானகாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சவக்கிடங்கிற்குச் சென்று, அங்கிருந்த உடல்கள் மத்தியில் மகனைத் தேடியுள்ளார். அப்போது, நல்வாய்ப்பாக பிணக்குவியலுக்கு இடையே தனது மகன் பிஸ்வஜித் மயக்கம் அடைந்த நிலையில், உயிரு டன் இருப்பதைக் கண்டு, ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார். தற்போது பிஸ்வஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், மருத்துவர்கள் மூலமாக சோதிக்காமலேயேதான் 275 பேரின் இறப்பையும், ரயில்வேயும், ஒன்றிய அரசும் முடிவு செய்தனவா? என்றும், பிஸ்வஜித் போன்ற எத்தனை பேர் உயிருடன் இருந்தார்களோ? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.