சென்னை, மார்ச் 30- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழையூரில் புதிதாக மின்மாற்றி அமைத்து கொடுக்கப் படும் என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழ னன்று (மார்ச் 30) ‘‘கீழ்வேளூர் தொகுதி, வாழக்கரை ஊராட்சிமன்றம் தெற்குத் தெரு வில் மின்கம்பத்துடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க அரசு முன்வருமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகைமாலி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,“வாழக்கரை ஊராட்சிமன்றத்தில் மின்கம்பத்துடன் 35 தெருவிளக்குகள் அமைத்து மின் இணைப்பு வழங்கப்படும்’’ என்றார். கீழ்வேளூர் ஒன்றியம், சிகார் தெற்குத் தெரு முதல் எடையாற்றுப்பாலம் வரையும் மின்கம்பத்துடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றும் கீழையூரில் 33 கே.வி துணை மின் நிலை யம் அமைக்கவும் அரசு ஆவன செய்யுமா? என்றும் துணைக் கேள்விகளை எழுப்பி னார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘‘மின் கம்பத்துடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க ஊராட்சி மன்றத் தலைவரால் விண்ணப்பம் அளித்து அதற்கான நிதியை செலுத்தினால் விரைவாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் கீழையூரில் வரும் ஆண்டில் முன்னு ரிமை அடிப்படையில் மின்மாற்றி அமைத்து கொடுக்கப்படும்’’ என்றும் கூறினார்.