மவுலானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைப்பதென ஒன்றிய சிறு பான்மை விவகாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. சிறுபான்மை வெறுப்பு மனப்பான்மை யின் காரணமாக, ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மாணவர்களின் உரிமை களுக்கு எதிரானதாகும். முஸ்லிம் மாண வர்களின் கல்வி வளர்ச்சியில் இது கடுமை யான பாதிப்பை ஏற்படுத்தும். சிறுபான்மை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்படும். மத்திய வக்பு கவுன்சில் உத்தரவின் பேரில் கூறப்படும் இந்த நடவடிக்கை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பாதிக்கும் ஓர் அராஜக செயலாகும். இது “சப் கா சாத், சப் கா விகாஸ்” (அனைவருடனும் அனை வருக்குமான வளர்ச்சி) என்ற பிரதமர் மோடி யின் உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது. 1989 இல் நிறுவப்பட்ட மவுலானா ஆசாத் கல்விச் சங்கம், ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சரவை யின்கீழ், கல்வியில் பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு, குறிப்பாக நிதி சவால்களை எதிர்கொள்ளும் “முஸ்லிம் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நம்பிக்கை யின் கலங்கரை விளக்கமாக” இருந்து வரு கிறது. திறன் மேம்பாடு - உதவித்தொகை திட்டங்கள் கடந்த காலங்களில் இந்தச் சங்கம், சிறு பான்மை விவகார அமைச்சகத்தின் முழு நிதியுதவியுடன், சிறுபான்மை மாணவர் களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித் துள்ளது. “காஜா கரீப் நவாஸ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம்” மற்றும் “‘பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உத வித்தொகைத் திட்டம்” போன்றவற்றின் முன்முயற்சிகள், சிறுபான்மை இளைஞர் களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், மதச் சிறுபான்மையினரை சேர்ந்த திறமையான பெண்களுக்கு, தேவையான உதவித்தொகைகளை வழங்கு வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. அறக்கட்டளையில் கணிசமான நிதி இருந்த போதிலும், 2023 நவ.30 நிலவரப்படி (1073.26 கோடி ரூபாய் வைப்பு), அதன் உபரி நிதியை இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றச் சிறுபான்மை விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது சூழ்ச்சி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இச்சங்கம் நடைமுறைப் படுத்தும் திட்டங்களால் பயனடையும் சிறுபான்மை மாணவர்களின் உரிமை களுக்குப் பெரும் துரோகம் இழைக்கப் பட்டுள்ளது. இதனைக் கலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தேசத்தை நிர்மாணித்த ஆளுமைகளின் கனவை புறக்கணிப்பது மட்டுமின்றி, அரசியல் சாசனம் வழங்கி யிருக்கும் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய சம நீதி, சம வாய்ப்புக் கொள்கைகளுக்கும் எதிரானது. நிர்வாக முடிவுகள் - சீர்திருத்தங்கள் என்ற பெயரில் சிறுபான்மை மாணவர்களின் உரிமைகள் நசுக்கப்படக் கூடாது. நமது நாட்டின் பன்முகத் தன்மையின் கூறுகளை நிலைநிறுத்த வேண்டும். மவுலானா ஆசாத் கல்வி சங்கத்தை கலைப்பது என்ற முடிவை கைவிட வேண்டும்.