மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் 9-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், கடை ஊழியர்கள் 9 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற் பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலைய சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடி செலவில் மேம்படுத்தப் பட்ட நிலையில், 1,578 காவல் நிலையங்களில் 12 முதல் 18 மாதங்கள் வரை காட்சிகளை சேமிக் கக் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி தொட ங்கி உள்ளதாக உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரசாயன பூச்சு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கன்னியா குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 6-ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு இடங் களில் புதனன்று மாலை முதல் டுவிட்டர் சேவை யில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பயனர்கள் அவதிக்குள்ளாகி உள்ள னர்.
உலகச் செய்திகள்
உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து இத்தாலி மக்களின் வாங்கும் சக்தி பாதியாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வு மையமான நோமிஸ்மா வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஏழில் ஒரு இத்தாலியர், தனது தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்றும், 25 விழுக்காட்டினர் தங்கள் ஊதியம் அனைத்தையும் அடிப்படையான பொருட்களை வாங்குவதற்காகவே செலவழித்து விட்டோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
2023-ஆம் ஆண்டில் ஸ்வீடனின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஆணையம் எச்சரித்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டின் 4-ஆவது காலாண்டில் ஸ்வீடனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.9 விழுக்காடு சரிந்திருக்கிறது. இந்தக் காலாண்டில் சரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் நெருக்கடி குறைவாகவே இருந்திருக்கும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 2022 ஆம் ஆண்டில் 2.4 விழுக்காடு வளர்ச்சி எட்டப்பட்டதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நேபாளத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எட்டு கட்சிக் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்பட்ட பல்வேறு நிலைப்பாடுகளால் உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்தியிலும், மாகாணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரசின் ராம் சந்திர பாடெலுக்கு மாவோயிஸ்ட் மையம் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால் நேபாள அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.